Monday, January 23, 2012

யார் சொன்னது நீதித்துறையில் லஞ்சமில்லையென்று?

யார் சொன்னது நீதித்துறையில் லஞ்சமில்லையென்று?

முன் பதிவை பார்வையிட்டு தொடர்ந்தால் விளக்கமாக புரியும்.
வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை
மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை
சிறை மற்றும் நீதித்துறையின் அவல நிலை

அரசுத்துறையிலேயே இடைத்தரகர் (வக்கீல்) இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விண்ணப்பதாரர் சாதிக்கமுடியாத ஒரே துறை நீதித்துறை மட்டுமே. மற்ற அரசுத்துறையில் ஒரளவுக்காவது நாம் நேரடியாக சந்தித்து நம் பிரச்சனையை முறையிட்டு சூழ்நிலைகளை அறிந்துக்கொள்ள, நிறைவேற்றிக்கொள்ள முடியும்.  நீதித்துறையில்?????

பெரும்பாரும் நீதித்துறையில் லஞ்சங்கள் (வக்கீலுக்கு சேருவது இல்லாதது) வக்கீல்கள் வழியாகவே பரிவர்த்தனங்கள் நடக்கும் அல்லது வக்கீல் வழிநடத்துவார் யார் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டுமென்று. பிரபல வக்கீல்கள் என மிக அதிகமாக பீஸ் (எல்லாத்துக்கும் சேர்த்து) வாங்குகிறவர்கள், தானே அனைவரிடமும் சேர்த்து சரிகட்டிவிடுவார்கள்.

காவல்துறையில் சார்ஜ் ஷீட் பைல் பண்ணி கோர்டில் பைல் பண்ணி சீக்கிரம் விசாரணைக்கு வர அரசுத்துறை வழக்கறிஞரை கவனித்தால் போதும்.

சார்ஜ் ஷீட்டை சரியில்லை என திருப்பி காவல்துறைக்கே அனுப்பி வீக்கான அல்லது சட்ட ஓட்டை உள்ள சார்ஜ் ஷீட் தயார் செய்ய அரசுத்துறை வழக்கறிஞரை கவனித்தால் போதும்.

முன் தேதியிட்டு நீதிமன்றத்தின் வழியாக வழக்கு, நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென்றால் கவனித்தால் அதுவும் நடக்கும்.

நீதிமன்ற நோட்டீஸை தபால் வழியாக இல்லாமல் வீடு தேடி போய் கொடுக்கவைக்க கவனித்தால் அதுவும் நடக்கும்.

வழக்கு விசாரணை தேதியில் உங்கள் பைல் மேலே (முதலிலே அழைக்க) வேண்டுமானால் கவனித்தால் அதுவும் நடக்கும்.

நீதிபதிகளின் மனநிலையை அறிந்து வக்கீலே வழிகாட்டுவார் எப்படி நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து வழக்கை, தீர்ப்பை சாதகமாக்கிக் கொள்வதற்கு.

லஞ்சம் வாங்காத நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்று கூற முடியுமே தவிற நீதிபதிகள் யாரும் லஞ்சம் வாங்கவே மாட்டார்கள் என்று தலைமை நீதிபதியால் கூட கூற முடியாது, ஏனைனில் வக்கீல் தொழிலிலிருந்து வந்த (நீதிபதிகள்) அனைவருக்கும் தெரியும் யாதார்த்த நிலைபாடுகள். அனைவரும் சராசரி மனிதர்களே! தன்னிச்சையாக பொதுமக்களின் வாழ்க்கையை
இவர்களை கொண்டு தீர்மானிக்க வைப்பது ஆபத்தானது.

நீதிமன்றத்திற்கு கொஞ்ச நாள் போய் வந்தாலே புரியும் இந்தியாவில் உள்ள ஊழலுக்கும், சீர்கேட்டிற்கும் காரணகர்த்தாவே நீதித்துறையில் உள்ள ஊழல் தான் என்பது.

வழக்கை தாமதப்படுத்துவது, குழப்புவது, இடைக்கால உத்தரவு வாங்குவது, ஒரே பிரச்சனைக்கு பல்வேறு வழக்கு போடுவது, விசாரணை என்ற பெயரில் வக்கீல்கள் (பணத்துக்காக) வழக்கில் சம்மந்தப்பட்ட அப்பாவிகளையும், நேர்மையான அதிகாரிகளையும் எவ்வளவு அசிங்கமாக பேசமுடியுமோ, அவமானப்படுத்தமுடியுமோ செய்து (அப்பாவிகள் வெறுத்து ஒமுங்கும் அளவுக்கு) போன்ற (அநீதியை நிலைநாட்ட) செயல்கள் அனைத்தும் லஞ்சமாகவே கருத வேண்டும்.

மனம் போன போக்கில், ஒரு தலைபட்சமாக (நியாயத்தை பார்க்காமல், பாவம் பொண்ணு என்று நினைத்து) தீர்ப்பு சொல்வதும் லஞ்சமே.

கீழ்கோர்ட்டில் சரிவர நீதி கிடைக்காமல் மேல் கோர்ட்டில் நீதி கிடைத்தால், கீழ்கோர்ட்டில் செய்த அலட்சியமும் லஞ்சமே.

அரசுத்தரப்பு என்பது (காலம், ஆட்சிக்கு தகுந்தவாறு) அரசியல்வாதிகளின் தரப்பாக மாறி வழக்கை எதிர்கொள்வதும் லஞ்சமே.

உயர், உச்ச நீதிமன்ற வக்கீல்களை வழக்கிற்காக அறிமுகப்படுத்தி வைத்து வாங்கும் கழிஷனும் லஞ்சமே

வழக்கு பற்றி நன்றாக தெரிந்தும் குற்றவாளி சார்பாக அநீதியாக வாதாடி பணத்திற்காக குற்றவாளியை தப்ப விடுவதும் லஞ்சமே.

அப்பாவியை விசாரணை கைதியாக அடைத்து வைத்திருப்பதும் லஞ்சமே.

லஞ்சம் என்பது நியாயமின்றி அப்பாவியின் நேரத்தையும், பணத்தையும், மன உலைச்சலையும் ஏற்படுத்துவது.

ஏன் நீதிமன்றம் விழிப்புடன் செயல்படாமல் இருக்கிறது??? நீதித்துறை சீர் செய்யாதவரை நமது நாட்டிற்கு விடிவே கிடையாது.

குற்றவாளிகள் (அநீதியாக) நல்ல வக்கீலை வைத்து வாதாடி (உயர், உச்ச நீதிமன்றம் வரை கூட சென்று ஏமாற்றி) வழக்கை ஒன்றுமில்லாததாக்கி நீதியை சாகடிப்பதும் லஞ்சமே. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அலைந்து பணத்தை செலவு செய்வதும் லஞ்சமே.

வரதட்சனை கொடுமை வழக்கு, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக வழக்கு என பல சட்ட பிரிவுகள் பெரும்பாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது காவல்துறையிலிருந்து நீதித்துறையில் உள்ள அனைவருக்கும் தெளிவாக தெரிந்தும் உண்மை நிரூபிக்கப்பட்டால் பொய்வழக்கு போட்டவர்கள் (சார்ந்த சாட்சிகள், சரிவர விசாரிக்கத்தெரியாத காவல்துறையினர், அநீதிக்கு துணைபோன வக்கீல்கள் உட்பட) மீது நீதித்துறை தானே முன்வந்து வழக்கு பதிந்து தண்டனை வழங்காமலும், பாதிக்கப்பட்ட அப்பாவிக்கு நஷ்ட ஈடு உடனே பெற்று தராமல் இருப்பதும் லஞ்சமே.

பொதுமக்கள் மட்டுமே நீதிபதியிடம் நேரடியாக வாதிட்டால் (வக்கீல்கள் வழக்கை நீட்டிக்கொண்டோ, குழப்பிக்கொண்டோ இருந்து பணம் சம்பாதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இல்லாமல்) கோடிக்கணக்காக வழக்குகள் தேங்கியிருக்காது. குறுகிய காலத்திலேயே தீர்வும் கிடைத்து விடும்.

ஒரு பாமரனாகிய என் மனதில் தோன்றும் கேள்வி?


வழக்கை சட்டத்தின் நுணுக்கத்துடன் நீதிபதி முன் வாதிடுவதற்கு வக்கீல் தேவையெனில், போதிய சட்ட அறிவு இல்லாதவர்களை நீதிபதிகளாக நியமித்தது யார் தவறு? பொதுமக்களாகிய நாம் ஏன் பணத்தை செலவு பண்ணி நீதிபதிக்கு சட்ட படிப்பை சொல்லிக்கொடுக்க வேண்டும்??

வழக்கு சம்பந்தமாக நீதிபதிகளுக்கு சட்டத்தை எடுத்து சொல்லி உதவி செய்யும் இருதரப்பு வக்கீலுக்கும் அரசு தானே செலவிட வேண்டும்? ஏன் பொதுமக்களிடம் வசூலிக்கிறார்கள்? 

நீதிபதிகளுக்கு வழக்கிற்கு தகுந்தாற்போல் சட்டத்தை எடுத்து கொடுக்க சாப்ட்வேர் இல்லையா?

ஓவ்வொரு நீதிமன்ற தீர்ப்பையும் நீதித்துறைக்குள்ளேயே உயர், உச்ச நீதிமன்றம் வரை மீளாய்வு செய்து இறுதியாக தீர்ப்பை வெளியிட்டால் பொதுமக்கள் தனித்தனியாக ஒவ்வொரு இடத்திற்கும் அலைய வேண்டியதில்லையே?

நீதித்துறையில் கட்டமைப்பில்லாததற்கு அப்பாவியாகிய நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்? அரசாங்கத்திற்கு அல்லாது அரசுத்துறையில் உள்ள நமது காரியத்திற்கு கொடுக்கும் பணத்தை லஞ்சமாகவே கருதுகிறேன்.

ஒரு வழக்கிற்கு அதிகபட்சமாக 500 ரூபாய் தான் வாங்க வேண்டுமென சட்டமியற்றுங்கள் பார்ப்போம்???? 50 லட்சம் செலவு பண்ணி படித்த டாக்டர்களே குறைவாகத்தான் பீஸ் வாங்குகிறார்கள் இவர்களை ஒப்பிடுகையில், அதே நேரம் நமது வியாதி குணமாகுவதை நம்மால் கணிக்க முடியும்.

பொய் புகார் கொடுத்து ஒரு வழக்கு பதிவு செய்வதற்கும் , (மிரட்டி பணம் பறித்துவிட்டு) வாபஸ் வாங்குவதற்கும் சில நிமிடங்கள் போதும் சட்டத்தின் படி (காவல்துறையிலும் மற்றும் நீதித்துறையிலும்), ஆனால் அப்பாவி உண்மையை எடுத்து வைத்து நிருபித்தாலும் நிரபராதி என்று தீர்ப்புவர வருடங்கள் ஆகும், அவனிடம் உள்ள சொத்துக்களை கறைத்து நிர்மூலமாக்கும் வரை. இதனால் தான் அனைவரும் கோர்ட் கேஸ் என்பது கேன்ஸர் போன்றது உயிரை எடுக்காமல் விடாது என்று அனுபவித்தவர்கள் சொல்வது.

பொய் புகார் கொடுத்தவர்களையும், சார்ந்த சாட்சிகளையும், அநீதிக்கு துணை போன வக்கீல்களையும், அலட்சியமாக சட்டத்தை இயற்றிய துறையினரையும், வழக்கை சரிவர விசாரிக்காமல் தொல்லை கொடுத்த காவல்துறையினரையும், ஆராயாமல் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், விசாரணை மற்றும் வழக்கை நீட்டிக்கொண்டே போனவர்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி பாதிக்கப்பட்ட அப்பாவி (வக்கீல் துணையின்றி) தண்டணை வாங்கிக்கொடுக்கும் காலம் வந்தால் தான் நீதியை நிலைநாட்ட முடியும். அனைவரும் பொறுப்புடன் நடந்துக்கொள்வார்கள்.

இந்தியர்களின் இதயம் பலவீனமாக இருப்பதற்கும், மன உலைச்சலினால் மன அழுத்தம், நீரிழிவு மற்றும் இதயக்கோளாறு வந்து இறப்பதற்கு நீதித்துறையும் காவல்துறையும் பொறுப்பு என்பதை எந்தளவு உண்மை என்பதை பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் கேட்டு பாருங்கள் தெரியும்.

இறந்த ஒருவரின் மனதை படிக்கும் மருத்துவம் இருந்தால் சொல்லும் நாட்டில் அதிகமாக கொலையாளிகள் இருக்கும் துறை நீதித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை என்று.

சுயபரிசோதனை வேண்டுமெனில் செய்து பாருங்கள், ஒரு மனிதருக்கு நீரிழிவு, இதயக்கோளாறு, மன அழுத்தம் நோய் ஏற்படுத்த வேண்டுமெனில் காவல்துறை, நீதித்துறையில் லஞ்சம் கொடுத்து சிக்கலான சட்டபிரிவில் வழக்கு ஜோடித்து தொல்லை கொடுக்க சொன்னால் கச்சிதமாக செய்து கொடுப்பார்கள். இதே பார்முலாவை உபயோகித்து நீரிழிவு, இதயக்கோளாறு, மன அழுத்தம் நோய் உள்ளவர்களையும் வயதானவர்களையும் சாகடிக்கலாம்.

ஒருவரை வாழ்வில் முன்னேர விடாமல் தடுக்க வேண்டுமா? சந்தோசத்தை குலைக்க வேண்டுமா? காவல்துறை, நீதித்துறையில் எப்படியெல்லாம் பொய் கேசு போட்டு டார்ச்சர் கொடுத்து நிலைகுலைய செய்யலாம் என்பதை பார்த்துக்கொள்வார்கள். பிராடுகளுக்கு கோர்ட் கேஸ் என்பது சாதாரண விசயம். நல்ல அந்தஸ்தான குடுமபத்தில் பிறந்து நேர்மையாக வாழ பயிற்றுவிக்கப்பட்டவர்களுக்கு தான் இதன் வேதனை புரியும்.

நீதிபதிகளுக்கும், வக்கீலுக்கும் தினமும் கோர்ட் வருவது அவர்கள் தொழில், வழக்கை நீடித்து பொதுமக்களை அடிக்கடி அலையவிடுவதால் பொதுமக்களுக்கு தொல்லைகள் தபன் அதிகம். புலி வாலை பிடித்த கதை போல. பொய் புகார் கொடுத்தவர்களுக்கு எப்படியும் லாபமே, நீதிபதி எப்படியும் பணம் பறித்து கொடுத்து விடுவார் என்பதால்.
சட்டத்தை ஒருதலை பட்சமாக இயற்றுவது, சரி செய்யாமல் அப்பாவிகள் தானே கஷ்டப்படுகிறார்கள் என்று துறையை சார்ந்தவர்கள் அலட்சியமாக இருப்பதும், மனம் போன போக்கில் (பாவம் பொண்ணு என்று) தீர்ப்பு சொல்வதும் பொதுமக்களிடம் பிரிவினையை உண்டுபண்ணி நாட்டை பலவீனப்படுத்தாதா??? சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நீதமாகவும் தானே இருக்க வேண்டும்?

சமீப காலமாக இந்தியர்கள் IT, Business Consulting & Management-   ல் முன்னேறி வரும் நிலையில், அரசாங்கமே ஒவ்வொரு துறையில் உள்ள அவலங்களை சீர் செய்ய Private consulting company யை அமைத்து ஆலோசனை பெறலாம். ஏனெனில் அரசுத்துறையில் உள்ள மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ளவர்களுக்கு துறையில் உள்ள தவறுகள் தெரிந்தும் பூனைக்கு யார் மணி கட்டுவது என கட்டுங்காணாமல் இருப்பதால்.

சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சட்டமே முன் வந்து என்ன (backfire) செய்தது? சட்டம் என்பது தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் அப்பாவிக்கும் இடையே இடைத்தரகராக இருந்து அப்பாவிக்கு மிகுதியாக தொல்லை கொடுக்கிறது.

ஒவ்வொரு குடிமகனையும் நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய சொத்தாக மாற்றக்கூடிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இந்தியா அஹிம்சையின் மூலம் வெற்றி கண்ட நாடு. அடக்குமுறையின் மூலம் காவல் நிலையத்திலும், சிறையிலும் தவறு செய்பவர்களையும், தவறு செய்யாதவர்களையும் நேரடியாக துன்புறுத்தியும், அவர்களை சார்ந்தவர்களை நிர்கதியாக்கி மறைமுகமான துன்பத்தையும் கொடுக்கிறது.

பாதுகாப்பு என்பது வன்முறையிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல, தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுக்காமல் வாழ வழிவகை செய்வதும் பாதுகாப்பே.

லாபத்திற்காக பொய் வழக்கின் மூலம் அப்பாவிகளை துன்புறுத்தும் காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கும் கூலிப்படையினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நோக்கம் ஒன்றே, சக்திக்கேற்றாற் போல் வழிமுறை மாறுபடுகிறது.

இந்தியாவில் தீவிரவாத அச்சுதலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 0.01 சதவிதத்திற்கு குறைவாக இருப்பார்கள். ஆனால் கர்ப்பத்தில் ஆரம்பித்து மறைவு வரை லஞ்சம் மற்றும் ஆதிக்கம் ஆகிய உள்நாட்டு தீவிரவாதத்தால் மக்கள் பாதிக்கிறார்களே, அரசாங்கம் இராணுவ பட்ஜெட்டை இந்த உள்நாட்டு தீவிரவாதத்துக்கு செலவு செய்தால் அனைத்து இந்தியருக்கும் பலன் கிடைக்குமே???

மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இந்தக் கட்டுரை யாரையும் குறை சொல்ல வேண்டுமென்பதற்காக எழுதவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக்குமுறலை உணர்ந்து சிந்தித்து செயல்படுவதற்கே.

Monday, December 26, 2011

சிறை மற்றும் நீதித்துறையின் அவல நிலை

சிறை மற்றும் நீதித்துறையின் அவல நிலை.

முன் பதிவை பார்வையிட்டு தொடர்ந்தால் விளக்கமாக புரியும்.
வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை
மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை

சிறை:
சிறையிலிருப்பவர்களெல்லாம் குற்றம் செய்தவர்களில்லை, நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் தட்சணை கொடுக்க வசதியில்லாதவர்கள் அல்லது வழி தெரியாதவர்கள்.
நாம் கண்கூட பார்க்கிறோம் எவ்வளவோ சமூக விரோதிகள் சுதந்திரமாக உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். காவல்துறையை கவனித்து குற்றப்பத்திரிக்கையை கரெக்ட் செய்ய முடியவில்லையெனில், நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், பென்ச், உயர்நீதிமன்றம், பென்ச், உச்ச நீதிமன்றம், பென்ச் என நிறைய வழிகள் உள்ளது. அயோக்கியர்களை யோக்கியர்கள் என்று வாதாடத்தான் வக்கீல் கூட்டமே உள்ளது ஏனெனில் பணம் நிறைய கிடைக்கும். ஏன் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத் மாலனி கூட பணம் அதிகம் கொடுத்தால் வாதாடி வெளியே கொண்டு வந்து விடுவார்.

பணம் கொடுத்தால் சிறையில் நமக்கு வசதியும் கிடைக்கும், பிறருக்கு தொல்லையும் ஏற்படுத்தலாம். இது பற்றியே பெரிய தொடர் எழுதலாம்.

அப்பாவிக்கு சிறை வாழ்க்கை என்பது கொடுமையிலும் கொடுமையானது. அவன் வேலையிழந்து கௌரவம் இழந்து குடும்பத்தையும் அனாதையாக்குவது சொல்லிமாளாது.

மனித உரிமையை பேசுகிறவர்களுக்கும், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யும் வக்கீலுக்கும் சொல்ல விரும்புவது சமூக சேவை கண்ணோட்டத்தில் சிறையிலுல்லவர்களின் மனக்குமுறல்களை கேட்டு நீதியை நிலைநாட்டி விடிவுகாலம் பிறக்க வழிசெய்யலாம். அவர்களை நம்பி வாழ்ந்த குடும்பத்திதனரின் பணத்தேவைக்கு உதவலாம். அவர்களை எப்படி நாட்டின் சொத்தாக மாற்றுவது என நல்ல சமூக சூழ்நிலையை சிறையில் ஏற்படுத்தலாம். மனிதனை மனிதனாகவும் மிருகமாக்குவதும் அவனை சுற்றி அமைந்துள்ள சூழலே.

உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அப்பாவிகளை சிறைக்கு அனுப்பிய தகுதியில்லாத காவல் துறையினர், பணத்திற்காகவே அநீதிக்காக போராடும் வக்கீல்கள், சம்பிரதாயத்திற்காக வேலை செய்யும் நீதிபதிகள்.


அரசாங்கத்திற்கு:
என்ன தான் சம்பிரதாயத்திற்கு சட்டங்கள் உத்தரவு போட்டாலும், அதை நடைமுறை படுத்தி நீதியை நிலைநாட்டினால் வக்கீல்கள், நீதிபதிகள், காவல்துறையினர், அரசியல்வாதியினர் திருந்துவது என்பது சாத்தியப்படாத ஒன்று. ஏனென்றால் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வரமுடியும், போட்ட பணத்தை எடுக்க இந்த நெட்வொர்க் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். எனவே அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பு:
இந்தியக்கலாச்சாரத்திற்கும், இந்தியக்குடிமகனுக்கும் முன்னுதாரனகாக அரசுத்துறையினரை உறுவாக்கி செயல்படுத்தி முன்னுதாரனமாக செயல்பட வேண்டும்.

தகுதியும், திறமையும் இல்லாதவர்களை பதவியை விட்டு தூக்கியெறிய வேண்டும். தவறே செய்யாத நான் எதற்காக அலைய வேண்டும், காவல் நிலையத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிறைக்கு செல்ல வேண்டும், வக்கீல் பீஸ் கொடுக்க வேண்டும், நீதிமன்றம் அலைய வேண்டும், மனம் போன போக்கில் சட்டத்தை வளைத்து தீர்ப்பாக சொல்லும் நீதிபதிக்கு அடிபணிய வேண்டும். தவறு செய்தது தகுதியும் திறமையுமில்லாத காவல்துறை, நீதித்துறையினர்.

1) அரசு மருத்துவமனை உள்ளது போல், அரசு வக்கீல்கள் அமைப்பு ஒன்றை 100 கேசுக்கு 1 வக்கீல் என நிருவி அப்பாவிகளுக்கு அரசாங்க செலவில் வாதிட வேண்டும். பணத்திற்கு ஆசைபட்டு காவல்துறையும், நீதித்துறையும் பணம் (லஞ்சம்) கொடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக போடும் பொய் கேசுக்கு அப்பாவி எதற்கு வக்கீல் பீஸ், சிறைவாசம், வீணான அலைச்சல் படவேண்டும்?. துறையை ஒழுங்குபடுத்த முடியாத அரசு பொறுப்பேற்று செலவு செய்ய வேண்டும். முழுமையான விசாரனைக்கு பின் அப்பாவி, நிரபராதி என நிரூபிக்கப்பட்டால், சரிவர விசாரிக்காமல் செயல்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர், அரசு (காவல்துறை) தரப்பு வழக்கறிஞர், பணத்திற்கு ஆசைபட்டு அநீதியை நிலைநாட்ட பெண்ணின் சார்பாக வாதாடி அப்பாவிக்கு தொல்லை கொடுத்த வக்கீல், எதையும் முழுமையாக ஆராயாமல் ஜாமீன் கொடுக்க மறுத்து அப்பாவிகளை ஜெயிலுக்கு அனுப்பி அந்த (நடிப்பு) பெண்ணிடம் நல்ல பெயர் வாங்கிய நீதிபதி, சுய லாபத்திற்காக அரசாங்கத்தை ஏமாற்றி பொய் புகார் கொடுத்த பெண் ஆகியோரை (அப்பாவிகளை அல்லல் படுத்தியதற்கு தண்டணையாக) குறைந்தது 1 வருட சிறைவாசத்தை கட்டாயமாக்க வேண்டும். நீதியை காக்க வேண்டியவர்களே அப்பாவிக்கு அநீதி இழைத்தால் அரசு தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டும்.
2) பள்ளி, கல்லூரி, அரசு அமைப்புகளின் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனது உரிமை சட்டம், தற்காப்பு சட்டம், இந்திய பொது சட்டங்கள் என ஏதாவது அரசு போதித்துள்ளதா?

வழக்கறிஞர்கள்:
வழக்கறிஞர்களுக்கு என்று அரசு எந்த வரைமுறையே விதிக்காததால்,
நீதி நேர்மையை புறந்தள்ளிவிட்டு, குற்றம் செய்வவர்களை (சட்டத்தை குழப்பி) தண்டணையிலிருந்து தப்பிக்கவைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு குற்றசெயல் புரிபவர்களின் வெற்றிகரமாக செயல்படுவதற்கு பின்னால் வக்கீல்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை. அதிகமாக வழக்குகள் பதிவாகுவதற்கு பின்னாலும், வழக்குகள் தேங்கி கிடப்பதற்கு பின்னாலும், வழக்குகள் இழுத்துக்கொண்டே போவதற்கு பின்னாலும் வழக்கறிஞர்களை தவிற வேறு யாரும் கிடையாது.
தனது ஒவ்வொரு கிளைன்டையும் பொன் முட்டையிடும் வாத்தாக பாவித்து வருடக்கணக்கில் பணம் பார்க்க ஆசைபடுவார்களே தவிற, வழக்கை சீக்கிரம் முடித்து பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து பார்க்க ஆசைபடமாட்டார்கள். பணத்திற்காக எந்த அப்பாவிகளின் மீதும் வழக்கு போட்டு துன்புருத்த தயங்க மாட்டார்கள். நீதிபதியிடம் எப்படி எப்படியெல்லாம் நடித்து தப்பிக்க வேண்டுமென்பதை தனது கிளைண்டை நடிக்க வைப்பதை சாதாரணமாக கோர்ட் வளாகத்தில் காணலாம்.

நீதிபதிகள்:
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான குற்றத்திற்கு ஒரே மாதிரியான தீர்ப்பு என்பது கிடையாது. ஒவ்வொரு நீதிபதியும் இரக்கப்பட்டு மனது வைத்தால் தான் அப்பாவி தப்பிக்க முடியும். இவர்கள் சொல்கின்ற தீர்ப்பால் பாதிப்புக்குள்ளான அப்பாவி, நீதிபதியை குறை (எதிர்த்து) கூற முடியாது. வழக்கை மறு ஆய்வு செய்யச் சொல்லி தாழ்மையுடன் முறையிட மட்டுமே முடியும். நீதிபதிகள் அளித்த (தவறான) தீர்ப்பை, சரி என்று வர்ணம் பூச நிறைய சட்டங்கள் துறையை சார்ந்தவர்களுக்கு கை கொடுக்கிறது.
பொதுவாக தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டங்கள், அப்பாவியை அல்லல் படுத்துவதற்கும், குற்றம் செய்பவர்களை தண்டனையிலிருந்து தப்பிப்பதர்க்கும் பெரிதும் உதவுகிறது என்ற நிதர்சன உண்மையை தெரிந்துக்கொள்ள சட்ட அறிவு வேண்டுமென்பது அவசியமில்லை, பொழுது போக்கிற்காக ஒரு நாள் கோர்ட் சென்று வேடிக்கை பார்த்தால் எவரும் எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.

பொன்னுக்கும், பெண்ணுக்கும் ஆசைபட்டு தீர்ப்பளிக்கின்ற நீதிபதிகள் பெருகி வருவது வருத்தப்பட கூடியதாக உள்ளது.

திருமணத்திற்கு முன் உறவு கொள்வது என்றால், இருவருக்கும் தண்டணை கொடுங்கள். மைனர் பெண்ணாக இருந்தால் பெண்ணின் பெற்றோரையும் சேர்த்து தண்டியுங்கள். ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார் என்பதே முரண்பாடாக உள்ளதே?

ஒரு பெண், தன்னை காதலித்து விட்டு அல்லது உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுக்கிறார் என்று ஆண் மேல் புகார் தெரிவித்தால் காவல்துறையும், நீதித்துயையும் காட்டும் வேகம், எதிர்மறையாக ஒரு ஆண் புகார் கொடுத்தால் பெண்ணை மிரட்டி, வற்புறுத்தி திருமணம் செய்து வைக்குமா அல்லது பெண்ணை வைத்தே கற்பழிப்பு புகார் கொடுக்க வைத்து ஆணை தண்டிக்குமா? திருமண பந்தத்திற்கு பெண்ணிற்கு தன்னை விட வசதியான ஆணை ஏமாற்றி திருமணம் செய்துக்கொள்ள முடியும். ஆண் ஆசை படக்கூடாது.

ஆண்களாக பிறந்ததால் அரசு மானியமா கொடுக்கிறது?

பிறருக்கு துன்பம் விளைவிக்காத தனி மனித, குடும்ப சுதந்திரத்தில் தலையிட்டு வற்புறுத்தி அடக்கியாள நினைப்பது எப்படி சுதந்திரமாக இருக்கும். பிடிக்காதவர்களுடன் வாழ வற்புறுத்துவதும் சித்திரவதை தானே.

தீர்ப்பு வரும் வரை வருடக்கணக்கில் இருவரது உணர்வு உள்ளங்களை சிறையிலடைப்பதும் கொடுமை தானே. இதனால் அவர்கள் உணர்வுகளுக்கு வடிகால் வேண்டி தவறான பாதைக்கு சென்று சமூக சீர்கேட்டிற்கு செல்ல அரசாங்கமே சூழ்நிலை ஏற்படுத்தி தருவது சரியா?

சேர்ந்து வாழ்வது சந்தோசமா, பிரிந்து வாழ்வது சந்தோசமா என முடிவெடுக்க வேண்டியவர்கள் இரண்டு உள்ளங்களே. அதற்கு ஏன் மூன்றாவது மனிதனாகிய நீதிமன்றத்திற்பு 10,20 வருடம் யோசனை. மீடியேசன் சென்டரில் 3 மாதத்திற்குள் இருவரும் பேசி நீதிபதி சாட்சியாக முடிவெடுத்து தீர்விற்கு எட்ட வேண்டியது தானே. எத்தனை நாள் வாழ்வோம் என்பதே உத்திரவாதமில்லாத உலகில் வாழ வேண்டி விவாகரத்து கேட்டால் உணர்ச்சி போய் சாகும் போது தீர்ப்பளிப்பது கொடுமையில்லையா? உணர்ச்சியற்ற வயதில் நீதிபதிகளாக அமர்ந்திருப்பதால் பிறரின் உணர்வு எப்படி புரியும்?

குழந்தை பாக்கியமில்லை என்ற காரணத்தை கொண்டு விவாகரத்து பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதெனில் அரசே பெண்களை அனுப்பி குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுமா? தனி மனிதரின் சந்தோசத்தை தீர்மானிப்பது அடக்குமுறையல்லவா?

காவல்துறையினரையும், நீதித்துறையினரையும் மட்டும் முறைப்படி முழுமையான விசாரனை செய்தாலே 90 சதவித சமூக விரோதிகளை கண்டுபிடித்து விடலாம். இந்த இரண்டு துறையினரும் நீதிக்கும், நேர்மைக்கும் பயந்து கடமையை செய்தால் 90 சதவித குற்றம் குறையும், ஏனென்றால் குற்றம் செய்பவர்களை ஊக்குவிப்பவர்கள் (குறிப்பாக நீதித்துறை) இல்லாததால். இன்வெஸ்டிகேஷன் ஆபிஸர் க்கும் தன்டணை வழங்கப்பட வேண்டும்.

நீதிபதிகளுக்கு ஒவ்வொரு வழக்கின் அனுபவத்தின் மூலம் தௌ;ளத்தெளிவாகத் தெரியும் (1) எந்தெந்த சட்டப்பிரிவுகள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறதென்பது. (2) எந்தெந்த வழக்கறிஞர்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள், வழக்கை குழப்பிக்கொண்டேயிருக்கிறார்கள், வழக்கை நீட்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரே விசயத்திற்காக பல்வேறு வழக்குகளை போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள் என்பதும். ஏனெனில் நீதிபதிகள் வானத்திலிருந்து குதித்தவதுகள் இல்லை, வழக்கறிஞர்களாக இருந்து வருடக்கணக்கில் மனிதத்தன்மையே இல்லாமல் அப்பாவிக்கு தொல்லை கொடுத்தவர்களே.

இன்று விவாகரத்து அதிகரித்து வருவதற்கு கலாச்சார சீர்கேட்டை ஒழுங்குபடுத்த தவறிய அரசும், மனம் போன போக்கில் (இளம்) பெண் வாழ ஒருதலைபட்சமாக செயல்படும் காவல்துறையும், நீதித்துறையுமே பொறுப்பு. நீதியை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு காவல்துறையும், நீதித்துறையும் பொய்கேசு போடுகிற கெட்ட பெண்களுக்கு புரோக்கராக செயல்பட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கணவர் வீட்டாரிடமிருந்து பணம் பறித்து கொடுத்து, தொல்லை கொடுத்து நிம்மதி இழக்க செய்து கூட்டு குடும்ப வாழ்க்ககையையே கெடுப்பது வருத்தமளிக்கக் கூடிய விஷயம்.
ஒவ்வொரு குடும்பத்தினரையும் கேட்டால் தனது குடும்பத்திலோ, உறவினர்கள் குடும்பத்திலோ இது மாதிரி பொய் கேசு கொடுத்து காவல்துறை நீதித்துறையினரின் உண்மையை விசாரிக்காமல் அநீதியிழைத்தல், கட்ட பஞ்சாயத்து, பணம் பறிப்பு, மனம் நொந்து உடல்நிலை பாதித்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளதை நினைவுகூறி இந்த மாதிரி மனிதர்களை சந்திக்காமல் மரணமடைந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று வேதனையுடன் கூறுவதை கேட்க வருத்தமாக இருக்கிறது.

இது மாதிரி பொய் கேசில் மாட்டி காவல்நிலையம், கோர்ட், லஞ்சம், வக்கீல் பீஸ், கோர்ட் அலைகழிப்பில் நொந்து போனவர்கள் சொல்வது, பந்த பாசத்தோடு வாழனும் என்பதற்காக தான் பொறுமையாக உள்ளேன். இல்லையெனில் கொளுத்தி விட்டுவிட்டு ஆத்ம திருப்தியுடன் இந்த தொல்லைகளை எதிர்கொள்ள முடியும். தப்பு செய்துவிட்டு தப்பிப்பதற்காக செலவு செய்வதில் சந்தோசம் உள்ளது. அநீதியை எதிர்த்து போராடுவதில் மன உளைச்சல் தான் அதிகமாகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருக குணம் உள்ளது. அதை சரியான பாதையில் செலுத்தி நாட்டின் சொத்தாக ஆக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அப்பாவியின் நேரமும் பணமும் நல்ல சிந்தனையும் ஏன் வீணாக்கப்பட வேண்டும் பொய் வழக்கிற்காகவும் அதை சரிவர விசாரிக்கத்தெரியாத காவல்துறை நீதித்துறையின் செயல்பாடுகளினாலும்? சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறாhகள் என்று தெளிவாக தெரிந்தும் அதை சரி செய்யாமல் யார் வீட்டு எழவோ என இருக்கும் அரசாங்கம், மாற்றாக ஊருக்கு ஊர் அரசாங்க மருத்துவமனை நிறுவியுள்ளதைப்போல் அப்பாவிகளுக்காக இலவச வக்கீல்கள், நிவாரணங்கள் வழங்கினால் நன்றாக இருக்கும்.

அதிகமாக மக்களை கொலை செய்தவர்களில் முதன்மையாக நீதிபதியும், காவல்துறையினரும் வருவார்கள். அடுத்ததாக வக்கீல்கள் வருவார்கள். காவல்துறை மனிதனை கொல்வதில் தீவிரவாதத்தை கடைபிடிப்பார்கள். நீதித்துறை மனிதனை கொல்வதில் மிதவாதத்தை கடைபிடிப்பார்கள்.

இந்தியாவில் 98 சதவிதத்திற்கு மேல் உள்ளவர்கள் தன்மானத்தையும் கௌரவத்தையும் வாழ்வியலாக கடைபிடிக்கக்கூடியவர்கள்.

இந்த கட்டுரை எழுதத்தூண்டிய எனது வேதனையை நீதிபதிகள் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் அப்பழுக்கற்ற கண்டிப்பான பாசமான நல்ல நேரிய முறையில் பிள்ளைகளே தனது எதிர்கால சொத்து என தன்னை வளர்த்த பெற்றோரை பெற்றிருந்து, தன்மானத்தோடு நேர்மையாக கடின உழைப்பில் முன்னேறி, கௌரவமான குடும்பமான வாழ்க்கை வாழ்ந்து, வரதட்சனை வாங்காமல் தனது நேர்மையான சம்பாத்யத்தில் திருமண செலவு செய்து மனைவியாக்கி, மனைவியாக வந்தவளை நல்லவள் என நினைத்து தனது செல்வங்களை அவளின் சந்சோசத்திற்கு செலவு செய்தும் தன்னையும் மதிப்பாக நினைக்கும் பெற்றவர்களையும் உதாசீனப்படுத்தி கேவலப்படுத்தி, கௌரவமாக வாழ அறிவுறுத்துவதை தனது சுதந்திரத்திற்கு இவர்கள் தடையாக இருப்பதாக (ஈகோ) நினைத்து இவர்களை கேவலப்படுத்தி பணம் பறித்து பிரிய வேண்டுமென்ற எண்ணத்தில் பொய்யான வரதட்சனை கொடுமை வழக்கை கொடுத்து, மகளிர் காவல்நிலையத்தில் அநீதியாக துன்புறுத்தப்பட்டு, கேவலபட்டு, பாரபட்சமான பாவம் பொண்ணு என்று பார்க்கின்ற நீதிபதி அப்பாவியான உங்களையும், உங்கள் பெற்றோரையும் 15 நாளில் காவலில் வைத்து, சிறையிலும் கேவலப்பட்டு, சிறைவாசம் முடிந்து வெளிவந்து, இந்த நிகழ்வால் அவமானப்பட்டு உருக்குலைந்து நடைபிணமாக வாழும் உங்கள் தந்தையை கேட்டு பாருங்கள் எவ்வளவு வேதனை அடைந்தார்கள் என்று? செல்லமான வளர்த்த தன் பிள்ளையை தன் கண்முன்னேயே செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருப்பதை பார்த்து எவ்வளவு மன அழுத்தமடைந்தார்களென்று? உங்கள் மனசாட்சியை கேட்டுபாருங்கள் உங்கள் கண்முன் பெற்றவர்கள் பட்ட வேதனையை எண்ணி எவ்வளவு வருத்தம் ஏற்பட்டதென்று? உங்களின் பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், உறவினர்களை கேட்டுபாருங்கள் எவ்வளவு வேதனைபட்டார்கள் அவமானப்பட்டார்களென்று? இந்த வேதனை அரசாங்கத்திற்கோ, அநீதி இழைத்த காவல்துறைக்கோ, அதற்கு துணை போன (அரசு மற்றும்) வக்கீலுக்கோ, தீர விசாரித்து நடுநிலையாக தீர்ப்பளிக்காத நீதிபதிக்கோ, கேவலப்பட்ட ஜென்மமாக நடத்திய சிறைத்துறையினருக்கோ, உண்மையை அறியாமல் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்டு மேலும் அவமானப்படுத்திய பத்திரிக்கை துறைக்கோ உணரமுடியாது.

மேலும் சார்ஜ் ஷீட் தயார் செய்கின்ற வரை காவல்துறையினர் கொடுக்கும் தொல்லையை சகித்துக்கொண்டும், வருடக்கணக்கில் வக்கீலுக்கு பீஸ் கொடுத்தும், தனது வேலையையெல்லாம் விட்டுவிட்டு நீதிமன்ற வாசலில் நாள் முழுக்க காத்து கிடந்தும், வழக்கு ஒத்தி வைப்பு, வேலைநிறுத்தம், நீதிபதி வரவில்லை, வக்கீல் வரவில்லை, எதிர் தரப்பு ஆஜராகவில்லை, வழக்கில் வக்கீல்கள் சட்டத்தை ஏமாற்றுகின்ற விதம் என அனைத்தையும் நடைபிணமாக சகித்து மன நிம்மதியிழந்து, வேலையையிழந்து, கௌரவத்தையிழந்து, பணத்தையிழந்து, உடல்குன்றி சாகக்போகும் தருவாயில் அப்பாவி என தீர்ப்பு வருவதற்குள் பெற்றோர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவே இறந்து இருப்பார்கள். திறமையான வக்கீலை வைத்து நாம் அதிக செலவு செய்யாவிடில் தீர்ப்பு நமக்கு பாதகமாக இருக்கும். எப்படி தீர்ப்பு வந்தாலும் தப்பு செய்த அந்த பெண்ணுக்கு எந்த தண்டனையும் நீதிபதி கொடுக்க மாட்டார். நம்மிடமிருந்து வலுக்கட்டாயமான ஜீவனாம்சமாக பணம் பறித்து பெண்ணிடம் கொடுப்பார்கள். இப்படி பட்ட மனசாட்சியில்லாதவர்களை கொண்டது தான் அரசாங்கம். சுருங்கச்சொல்ல வேண்டுமெனில் அப்பாவிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக கொள்ளையடித்து கெட்ட பெண்களுக்கு கொடுப்பதை தான் காவல்துறையினரும் நீதித்துறையினரும் நீதிக்கு அப்பாற்பட்டு செய்கிறார்கள்.

Sunday, December 4, 2011

மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை

முதல் பதிவை பார்வையிட்டுவிட்டு இதை தொடர்ந்தால் விளக்கமாக புரியும். கீழே கிளிக் செய்யவும்
வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை

மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை:
கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும், புகார் கொடுத்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினரும், நீதிபதிகளும் வலியுறுத்துவதன் உள்நோக்கம் காவல்துறையும், வக்கீல்களும் மட்டுமே அப்பாவிகளிடம் பணம் பறிக்க அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் என்ற சுயலாபத்தை மனதில் கொண்டு நடிப்பவர்கள் என்பதையும், பணத்திற்காக காவல்துறை என்பது அப்பாவிகளை உயிரோடு சாகடிப்பதில் தீவிரவாதத்ததையும் நீதித்துறை மிதவாதத்ததையும் கடைபிடிப்பதின் உண்மை நிலையை இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து நடைமுறையை ஒப்பிட்டு பார்த்தால் புரியும். தற்போதைய நாகரீகமாக வேண்டப்படாதவர்களை கூலிப்படையை வைத்து துன்புறுத்துவதை விட அரசு அங்கீகாரம் பெற்ற கூலிப்படையான காவல்துறையிடம் பணத்தை கொடுத்தால் வேலை சுலபமாக முடிகிறது, நமக்கும் சிக்கல் வராது. அதற்க்கும் மேல் காவல்துறையின் அத்துமீறல்களை வேண்டப்படாதவர் எதிர்த்தால் அரசுத்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் என மேலும் வழக்குகளை பதிவு செய்து வாழ்க்கையை சீரழித்து விடுவார்கள், அரசும் நம்பும் என்பதே பொதுவான கண்ணோட்டம்.

காவல் நிலையத்தில் பணத்திற்கு ஆசைபட்டு கேவலமாக நடக்க மறுத்தால் அவர்களை பணிய வைக்க லஞ்சம் வாங்கும் மேல் அதிகாரிகளை அணுகினால் முன்னின்று வரைபடம் போட்டுக்கொடுத்து அடிக்கடி தொலைபேசியில் பிரஷர் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும் அல்லது ஒரு கிரிமினல் லாயரை அணுகினால் காரியத்தை சட்ட ரீதியாக பிரஷர் கொடுத்து முடித்துக்கொடுப்பார்.

மேற்குறிப்பிட்ட தன்மையை சார்ந்த பெண்கள் (தரப்பினர்) மகளிர் காவல்நிலையத்தை காந்தி படம் போட்ட பணத்துடன் அணுகி கணவர் மற்றும் சார்ந்த குடும்பத்தை மிரட்ட வேண்டும், துன்புறுத்த வேண்டும், பணம் பறிக்க வேண்டும், சொத்தை பறிக்க வேண்டும், சிறையிலடைத்து அல்லது தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று வக்கீல்கள் துணையுடனோ அல்லது நேரடியாக காவல்நிலையத்தையோ அணுகினால் புகார் மனு எப்படி தயாரிப்பது? எந்தெந்த சிக்கலான சட்டபிரிவில் எந்தமாதிரியான சம்பவங்கள் நடந்ததாகவும் மற்றும் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாகவும் புகார் மனுவில் பொய்யாக குறிப்பிட வேண்டும்? யார் யாரை வழக்கில் சிக்கவைத்து துன்புறுத்த வேண்டும் குறிப்பாக வயதானவர்கள், மதிக்கக்கூடியவர்கள்? யார் யாரிடம் எப்படி நடிக்க வேண்டும் குறிப்பாக மீடியா, நீதிபதி, அதிகாரிகள், அமைப்புகள்? என்று நயவஞ்சக ஆலோசனை வழங்கி வழிகாட்டுவார்கள். உதாரணத்திற்கு நடைமுறையில் காவல், நீதித்துறையினர் வழங்கப்படும் ஆலோசனைகள் சில, ஆனால் இது மாதிரி ஆலோசனை (கடுமையான சட்டபிரிவுகளில் வழக்கை பதிவு செய்ய)வழங்குவதில் கில்லாடி வக்கீல்கள் தான்:

1. கணவரோ, அவரது உறவினர்களோ புதிதாக இடம், தொழில் செய்ய இருந்தால் அல்லது செய்துக்கொண்டிருந்தால் அதன் பணத்தேவைக்காக வரதட்சனை கேட்டதாக பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

2. கணவரின் உறவினர்கள், நண்பர்கள் கற்பழிக்க முயற்ச்சித்ததாக பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

3. வருடக்கணக்கில் பிரிந்து வாழ்ந்தாலும், நேரே கணவர் வீட்டிற்கு கத்தியுடன் சென்று தன் கையை கிழித்துக்கொண்டு வெளியே ரோட்டில் ஓடிவந்து தன்னை கொல்ல முயற்சிக்கிறார்கள் என ஒப்பாரி வைத்து நடித்து அரசு மருத்துவமனையில் சேர்ந்து பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

4. கணவர், சார்ந்தவர்கள் மற்ற நாட்டில் இருந்தால் தொலைபேசியில் மிரட்டியதாகவும் பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

5. கட்சி, தொண்டு நிறுவனத்தினர், மீடியாக்காரர்கள் உதவியுடன் தர்ணா செய்து பொய்
புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம். இளம்பெண் சொன்னால் உண்மையாகத்தானே இருக்கும் என்ற ஹீரோக்கள் தானே அதிகம்?


புகாரும், பணமும், கவனிப்பும் வந்தவுடன் மகளிர் காவல் நிலையத்தினரின் சேட்டைகள் ஆரம்பமாகும்.

1. கவனிப்புக்கு உதாரணமாக பிரபலமான ஹோட்டலிலிருந்து வகை வகையான சாப்பாடு வாங்கிக்கொண்டு போய் கொடுக்க வேண்டும், பிறகு காபி,ஐஸ் கிரீம், பழச்சாறு, பீடா என அத்தனையும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். வீட்டிற்கும் பார்சல் வேறு. இதற்கெல்லாம் புரோக்கர்களும் உண்டு.

2. போலீஸ் ஜீப் பணம் கொடுத்தவருக்காக அவர்கள் சொல்லும் இடத்திற்கெல்லாம் (கணவர், சார்ந்தவர்கள் வீட்டிற்கெல்லாம் போலீஸ் ஜீப்பில் சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்து குற்றவாளிகள் போல் அவமானப்படுத்த) சென்று கணவரையும், அவரை சார்ந்த பெரியவர்களையும் கண்ணியக்குறைவாகப்பேசி விசாரிப்பதாக மற்றவர்கள் முன் அவமானப்படுத்துதல்

3. விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று ஸ்டேஷனில் (லஞ்சம் கொடுத்தவர்களை சந்தோசப்படுத்த அவர்கள் முன்) கணவனையும், அவரது தாய், தந்தை, சகோதர சகோதரிகளை கேவலமாக பேசுவது, கெட்ட வார்த்ததைகளை அதிகமாக உபயோகிப்பது, அடிக்க முயற்ச்சிக்கும் பாவனை செய்வது, அடிப்பது என்ற சம்பிரதாயங்கள் முடித்து சிறையிலடைப்பது. பெரும்பாலும் சிறையிலடைப்பது வெள்ளிக்கி கிழமை மதியத்திற்கு மேல் நடக்கும். ஏனெனில் சனி, ஞாயிறு கோர்ட் விடுமுறையாதலால் திங்கள் வரை தங்கள் கஸ்டடியிலேயே சிறையிலடைத்து துன்புருத்தலாமென.

4. புகாரின் பேரில் விசாரணையின் பொழுது கணவர் தரப்பினர் தன்னிடம் உள்ள ஆதாரங்களை எடுத்து வைத்தால், அந்த ஆதாரங்களை லஞ்சம் கொடுத்த பெண் தரப்பிடம் கொடுத்து பொய் புகாரை மாற்றி எழுதி வருமாறு ஆலோசனை வழங்கி பிறகு முதல் தகவல் அறிக்கை பதியப்படும்.

5. மேலும் அவமானத்தை ஏற்படுத்த, பத்திரிக்கை நிருபர்களுக்கு போன் போட்டு வழக்கை பத்திரிக்கையில் பிரசுரிக்க ஏற்பாடு செய்வார்கள். அதிகமாக பயப்படுபவர்களிடமும், அவமானத்திற்கு அஞ்சுபவர்களிடமும் அதிகமாக பணம் கறக்க முடியும், கறந்துக்கொண்டே இருக்க முடியும் என்பது லாஜிக்.

6. வழக்கு பதிவு செய்யாமல் மிரட்ட மட்டுமே காவல்துறையை நாடும் பெண்கள், தான் விருப்பப்பட்டதை எழுதிக்கொண்டுவந்து காவல்துறை உதவியுடன் கணவரிடமும், அவர்கள் பெற்றோரிடமும் நிர்பந்தித்து கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு கணவரின் பெற்றோரையும், உறவினர்களையும் உதறி விட்டு தனிக்குடித்தனம் வர சம்மதிப்பதாகவும், பெற்றோர் சம்பாதித்த வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்க சம்மதிப்பதாகவும், வருமானம் அனைத்தையும் மனைவியிடம் மட்டுமே கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், இனிமேல் (பொய்யாக) வரதட்சனை கேட்க மாட்டேன், அடிக்க மாட்டேன், திட்ட மாட்டேன் எனவும் கணவர், அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்களிடம் எழுதி வாங்கி தன் இஷ்டப்படி குறுக்கீடில்லாமல் வாழ.

7. கணவர் தரப்பினர் இதைவிட அதிகமாக லஞ்சம் கொடுத்தால், விசாரித்துக்கொண்டு இருக்கிறோம் என்று அதிக துன்புறுத்தல் இருக்காது. ஆனால் மகளிர் காவல்நிலையம் என்பது இளம்பெண்கள் கொடுக்கும் புகார்களுக்கானது என்பதால் தொல்லை அதிகமில்லாமல் வழக்கு பதியப்படும்.

8. முடிந்தவரை அதிகமானோர் (குறிப்பாக வயதானோர்) மீது பல்வேறு சிக்கலான சட்டபிரிவுகளில் வழக்கு பதியப்படும். அடிக்கடி காவல்நிலையத்திற்கு நெருக்கமான வக்கீல்களுடன் கலந்துரையாடி எந்தெந்த சிக்கலான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய எந்தெந்த மாதிரியான சம்பவங்கள் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடவேண்டும் என. ஏனெனில் இதனால் காவல்துறையினருக்கு பல வகையில் லாபம் உண்டு என்ற உண்மையை விரிவாக காண்போம்.

9. காவல்துறை கட்டப்பஞ்சாயத்திலேயே மானத்திற்கு பயந்து பணமோ, சொத்தோ கொடுத்து செட்டிலானால் அதில் குறிப்பிட்ட சதவிதத்தை காவல்துறையினருக்கு கொடுத்து விட வேண்டும் என்பது சட்டம்.


வழக்கு (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டவுடன், மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து வசூலை ஆரம்பித்து பிரித்துக்கொள்வார்கள்.

முதல் குழு (குற்றம் சுமத்தியவர்களிடமிருந்து மேலும் பணம் பறிப்பது):

1. நல்ல வக்கீலாக அமர்த்திக்கொள்ளுங்கள், எனக்கு தெரிந்த வக்கீல் உள்ளார் என வக்கீலுக்கு ஆள் பிடித்து கொடுத்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்.

2. சார்ஜ் ஷீட் பதிவு செய்வதற்காக விசாரணை செய்கிறோம் என அடிக்கடி அழைத்து, உடன் சாட்சிகளையும் அலையவிட்டு வசூல் செய்து கொண்டே இருப்பார்கள். விசாரனைக்கு காலையில் வரச்சொல்லி மாலை வரை விசாரணை அதிகாரி (எல்லாம் ஒரே மகளிர் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தான், அதே ஆள் தான்) காக்க வைத்து பிறது அடுத்த நாள் காலை வரச்சொல்லி விசாரணை அதிகாரி வேண்டுமென்றே வெளியே சென்று லேட்டாக வருவார்கள். அதுவரை காத்து இருக்க வேண்டும். இல்லையெனில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிக்கல் ஏற்படுத்துவார்கள். இப்படியெல்லாம் பாடுபடுத்தி பணம் கறந்துக்கொண்டே இருப்பார்கள் சார்ஜ் ஷீட் பதிவு செய்யும் வரை.

3. கோர்ட், கேசு என வருடக்கணக்கில் அலைவதைவிட எதிர்தரப்பிடம் சமரசம் பேசி பணமோ, சொத்தோ வாங்கித்தருகிறேன், உன் இஷ்டப்படி தனிக்குடித்தனம் வாழவும், சொல்கிற கண்டிஷன்களுக்கெல்லாம் ஒத்துக்கொண்டு கணவர் வாழவும் எழுதி வாங்கித்தருகிறோம் என சமரசத்திற்கு முயற்சித்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுருத்தி மீண்டும் பெரும் தொகை கறப்பார்கள். இவ்வளவு நடத்திய பிறகும் இதன் உள் நோக்கம், கோர்டிற்கு போன பிறகு பணம் பறிக்க முடியாது, கேசுக்காக காவல்துறையினரும் வருடக்கணக்கில் அலைய வேண்டும்.



இரண்டாவது குழு (குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்து அக்கறை உள்ளவர்கள் போல் பேசி பணம் பறிப்பது):

1. நல்ல வக்கீலாக அமர்த்திக்கொள்ளுங்கள், எனக்கு தெரிந்த வக்கீல் உள்ளார் என வக்கீலுக்கு ஆள் பிடித்து கொடுத்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்.

2. சார்ஜ் ஷீட் பதிவு செய்வதற்காக விசாரணை செய்கிறோம் என அடிக்கடி (குறிப்பாக வயதானோர்களை) அழைத்து, குற்றவாளிகள் போல கேவலமாக நடத்தி, உடன் சாட்சிகளையும் அலையவிட்டு வசூல் செய்து கொண்டே இருப்பார்கள். விசாரணைக்கு காலையில் வரச்சொல்லி மாலை வரை விசாரணை அதிகாரி (எல்லாம் ஒரே மகளிர் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தான், அதே ஆள் தான்) காக்க வைத்து பிறது அடுத்த நாள் காலை வரச்சொல்லி விசாரணை அதிகாரி வேண்டுமென்றே வெளியே சென்று லேட்டாக வருவார்கள். அதுவரை காத்து இருக்க வேண்டும். இல்லையெனில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிக்கல் ஏற்படுத்துவார்கள். இப்படியெல்லாம் பாடுபடுத்தி பணம் கறந்துக்கொண்டே இருப்பார்கள் சார்ஜ் ஷீட் பதிவு செய்யும் வரை. பணம் கொடுக்காதோர் நிலை நடமாடும் பிணம் வாழ்க்கை.

3. வயதானவர்களை சாகப்போற வயதில் ஏன் கோர்ட், கேசு என அலைய விடுகிறீர்கள் என சென்டிமென்டாக பேசி, சார்ஜ் ஷீட்டிலிருந்து ஒவ்வொருவரின் பெயரையும் (விசாரணையில் உண்மையில்லை என) எடுக்க பல ஆயிரத்திலிருந்து லட்சங்கள் ஆகும் என பேரம் பேசி பணம் பறிப்பது. சிலருக்கு சிக்கலான சட்ட பிரிவிலிருந்து விடுவிக்க ஒரு பேரம் என இங்கு தான் அதிகம் பணம் பறிக்க முயற்ச்சிக்கப்படும்.

4. கோர்ட், கேசு என வருடக்கணக்கில் அலைவதைவிட எதிர்தரப்பிடம் சமரசம் பேசி பணமோ, சொத்தோ வாங்கித்தருகிறேன், உன் இஷ்டப்படி தனிக்குடித்தனம் வாழவும், சொல்கிற கண்டிஷன்களுக்கெல்லாம் ஒத்துக்கொண்டு கணவர் வாழவும் எழுதி வாங்கித்தருகிறோம் என சமரசத்திற்கு முயற்சித்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுருத்தி மீண்டும் பெரும் தொகை கறப்பார்கள். இவ்வளவு நடத்திய பிறகும் இதன் உள் நோக்கம், கோர்டிற்கு போன பிறகு பணம் பறிக்க முடியாது, கேசுக்காக காவல்துறையினரும் வருடக்கணக்கில் அலைய வேண்டும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோயாளிகளை சீக்கிரம் சாகடிக்க காவல்துறை ஒன்றே போதும். அதிகமானோரை விசாரனை என்ற சித்ரவதையில் ஊனமாக்கியதும், உயிரோடு சாகடித்த புகழும் காவல்துறையையே சாரும்.
நமது சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதும், அதை வாபஸ் செய்வதும் நிமிடத்தில் நடக்கும் வேலை. உண்மையை நிரூபிக்க அத்தனை ஆதாரங்களை காட்டினாலும் விடுவிக்க வருடங்கள் ஆகும்.


விரைவில் கீழ்கண்ட தலைப்பில்:
• வக்கீல்கள் எனும் பணத்திற்காக கேவலமான சிந்தனை, செயல்பாட்டை கொண்டவர்கள்,
• கோர்ட் மற்றும் நீதிபதிகள் என்ற அப்பாவிகளை அலையவிட்டு மனஉலைச்சலை உண்டாக்கி உயிரோடு சாகடிப்பவர்கள்.
• வரதட்சனை என்றால் என்ன?
• பத்திரிக்கை துறை என்ற சிந்திக்கும் திராணியற்ற அரை வேக்காட்டுதனமானவர்கள்.
• வழக்கிற்கு பிறகு இரு தரப்பினரின் மன நிலை
• அரசாங்கத்திற்கு வேண்டுகோள்

Saturday, June 25, 2011

வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை

கடந்த சில வருடங்களாக வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகமாக பதிவாகுவதை பத்திரிக்கை, தொலைக்காட்சி வழியாக கண்டு இப்படியும் கணவர் குடும்பத்தினர்கள் இருக்கின்றார்களே என்று ஆதங்கப்பட்டதுண்டு முழுமையாக இருதரப்பினரிடமும் ஆராய்ந்து நடந்த உண்மை சம்பவத்தை விசாரிக்காத வரை.

தலைசிறந்த இந்திய குடும்ப அமைப்பை சிதைக்கும் திட்டமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொய் வரதட்சணை கொடுமை வழக்கின் மூலம் குடும்ப அமைப்பு சிதைந்து வருவதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கம், யாரையும் புண்படுத்த வேண்டுமென்பதல்ல.

சட்டங்கள் இயற்றப்படுவதன் உண்மையான நோக்கம் அனைவருக்கும் சமநீதி, அநீதியை எதிர்த்து நீதி வாழ வேண்டுமென்ற உன்னத குறிக்கோள். இந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உறுவாக்கப்பட்டதே காவல் துறையும், நீதித்துறையும். இன்று மிகுதியாக சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும், தவறாக பயன்படுத்த வழிகாட்டியாக இருப்பதும் நீதித்துறை (வழக்கறிஞர்களும்), காவல்துறையை சேர்ந்தவர்களும் என்பதே நிதர்சன உண்மை.

மக்கள் நலனுக்காக சட்டத்தை இயற்ற தெரிந்த வல்லுனர்கள், அதை எப்படி தவறாக பயன்படுத்த நினைப்பவர்களிடமிருந்து பாதுகாப்பதென்பதில் கவனிக்க தவறுவதால் அப்பாவிகள் அல்லல்படுகிறார்கள், பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமென்ற சிந்தனையுடையவர்கள் இன்பமடைகிறார்கள். வேண்டுமென்றே சட்டத்தை பலகீனமாக இயற்றி, சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த அமைக்கப்பட்ட துறையை சார்ந்தவர்கள் வருவாய் ஈட்டிக்கொள்ள அரசே வழி செய்து கொடுத்துள்ளதா என்பது கடவுளுக்கே வெளிச்சம்?

அபரிதமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மையமாக கொண்டு இயங்கும் நவீன காலாச்சாரத்திற்குள் தன்னையும் முதன்மை படுத்திக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு, தவறு என்பதற்கு அளவுக் கோலின்றி
எப்படியும் வாழலாம் என்ற மனம் போன சிந்தையே சீர்கேட்டிற்கு அழைத்துச் செல்கிறது. இதற்கு உறுதுணையாக (1) பெற்றோர்கள் - தனது பிள்ளைகளுக்கு ஒழுக்கம், பண்பாடு, நீதி, கலாச்சாரத்தை போதித்து வழிகாட்டியாக இருக்காமல் பொருளீட்டல் மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுவது. (2) மீடியா – கெட்ட செயல்களை மட்டும் மெருகேற்றி தீய சிந்தனைகளை விதைப்பது. (3) அரசுத்துறையை சார்ந்தவர்கள் பணம் (லஞ்சம்) கொடுத்தால், வாடிக்கையாளரை திருப்தி படுத்துவது மட்டுமே எனது திருப்பணி என கூலிப்படையினரை மிஞ்சி (சட்டத்தை தவறாக பயன்படுத்தி) விசுவாசம் காட்டுவது.

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை (யும் மகளிர் காவல்நிலையத்தையும்) அரசு இயற்றியதன் உன்னத நோக்கம், பெண்ணின் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டுமென்ற உயரிய நோக்கம். ஆனால் தற்பொழுது நடைமுறையில் 99 சதவிதம் சட்டத்தை தவறாக பயன்படுத்தி (மகளிர் காவல்நிலையத்திற்கு லஞ்சம் கொடுத்தும், அநீதிக்கு துணைபோக வக்கீலுக்கு பணம் கொடுத்தும்) பணம் பறித்தும், மிரட்டி அடிபணிய வைத்தும் நவீன விபச்சாரமாக கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு உறுதுணையாக காவல்துறை, நீதித்துயையை சார்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த பிராடுகளுக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்து நடிப்பு பயிற்சி கொடுத்து (காவல்துறை, நீதித்துறையை கேவலப்படுத்தி கோமாளியாக்கி) ஏமாற்றக் கற்றுக்கொடுப்பவர்கள் என்பது தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய விஷயம்.

பொதுவாகவே தன் தவறை மறைக்க மற்றவர்கள் மேல் அபாண்டமாக பழியை போட்டு அவதூரை பரப்பினால் தனது குறையை யாரும் ஆராய மாட்டார்கள், உண்மையை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற மனோதத்துவத்திற்கேற்ப,

எந்தெந்த மாதிரி பெண்கள் இந்த பொய் கேசுகளை கொடுக்கிறார்கள் என்பதற்கு உதாரணங்கள் சில:

திருமணத்திற்கு முன்:
1) பெண்ணை பற்றி சரிவர விசாரிக்காமல் நிச்சயித்து, திருமணத்திற்கு முன் பெண்ணின் அல்லது பெண் குடும்பத்தினரின் யோக்கியதை தெரிந்து விலக முற்பட்டால்?

2) இன்டர்னெட் (சாட்டிங்) வழியாக உலக அழகி போல் பொய்யான பில்டப் கொடுத்து காதலிப்பது போல் ஏமாற்றி, மயக்கி பணம் கேட்டு மிரட்டி பணியாவிட்டால்?

3) மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் தன்னை ஒழுக்கமான குடும்பப்பெண் போல் செய்திகளை பரப்பி, நம்ப வைத்து, ஏமாற்றி, உண்மையறிந்து உஷாரானால்?

4) வசதியான இளைஞர்களை மயக்கி, திருமணம் செய்து, சொத்தை அனுபவிக்கலாம் என முயற்சித்து நிறைவேறாவிட்டால்?

திருமணமான சில அல்லது பல வருடங்களுக்குள்:
1) திருமணத்திற்கு முன் இருந்த கள்ள தொடர்பை (கணவர் வீட்டாருக்கு) மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால், பத்தினி வேஷம் போட்டு தப்பிக்க?

2) தொடரும் கள்ளக்காதல் வெளியில் தெரிந்தால், பத்தினி வேஷம் போட்டு தப்பிக்க?

3) காவல்துறை, நீதித்துறையை புரோக்கராக உபயோகித்து கணவர் குடும்பத்தாரின் மேல் அபாண்டமாக பழிசுமத்தி பணம் பறித்து தன் இஷ்டப்படி கேட்பாறின்றி மனம் விரும்பிய போக்கில் வாழ விரும்பினால்?

4) பெண்ணுக்கு இருக்கின்ற நீண்ட கால, தீர்க்க முடியாத வியாதியை மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால்?

5) தாம்பத்யத் தகுதியின்மை, குழந்தை பெற தகுதியின்மையை மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால்?

6) எப்படியும் வாழலாம் என்று பழகிய பெண்ணை குடும்பமாக கௌரவமாக வாழ நிர்பந்தித்தால்?

7) பணத்திற்கு (கொள்ளையடிக்க) ஆசைபட்டு வசதியான இடத்தில் திருமணம் செய்து திட்டம் நிறைவேறாவிடில், கிடைத்தவரை லாபம் என சுருட்டிக்கொண்டு சட்டரீதியாக செல்ல நினைத்தால்?

8) வசதியாக வாழ கனவு கண்டு வசதியான காதலரை நடித்து திருமணம் செய்து , கணவர் குடும்பத்தாரின் புறக்கணிப்பால், ஏமாற்றமடைந்து கணவரின் இயன்ற வருமானத்தில் நிஜ வாழ்க்கை வாழ நிர்பந்திப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனம் வெதும்பினால்?

9) திருமணத்தின் பொழுது மற்றவர்கள் எதிரில் பகட்டுக்காக பெண்ணுக்கு அதை செய்கிறேன், இதை செய்தேன் என்று வாய் சவடால் விட்டு நம்ப வைத்து நிஜத்தில் போலியான நகையை போட்டு, குறைத்து செய்துவிட்டு நிஜத்தை செய்ய அல்லது (குட்டை) மற்றவர்களுக்கு சொல்ல வலியுறுத்தினால்?

10) பிறந்த வீட்டில் மற்றவர்களை (வேலைக்காரர்கள் போல) வேலை செய்ய வைத்தே சுயநலமாக (செல்லமாக) வாழ்ந்து, புகுந்த வீட்டில் பொறுப்புகளை சுமக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் போது, யதார்த்தத்தை உணராமல் மன அழுத்தத்திற்குள்ளாகினால்?

11) கணவன் என்பவன் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரம், தனது சுதந்திரத்தில் தலையிட உரிமையில்லை என சினிமா, நாடகத்தில் வரும் ஹீரோயின், வில்லி கற்பனை கதாபாத்திரத்தை போன்று (தன்னிலையை உணராமல்) வாழ எத்தனித்து, கணவர் குறுக்கீடு செய்தால்?

12) புகுந்த வீட்டில் புதுப்பெண் என்ற இரக்கத்தில் விட்டுகொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டு கொடுக்கும் உரிமையை தவறாக ஏமாளிகள் என நினைத்து கீழ்தரமாக அல்லது ஆதிக்கம் நடத்த எத்தனித்து முயற்சி வெற்றி பெறாவிட்டால்?

13) கணவரின் பெற்றோரை கேவலமாக கொடுமைபடுத்துவதை கணவர் எதிர்த்து கேட்டால்.

14) கணவரின் பெற்றோர்கள், திருமணத்திற்கு பிறகு, கணவர் பெயருக்கோ, தன் பெயருக்கோ சொத்துக்களை மாற்றி கொடுக்காவிட்டால்?

15) கணவரின் பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்த முடியாவிட்டால், கணவர் சொத்துக்களோடு வந்து தனிக்குடித்தனம் நடத்த மறுத்தால்?

16) கணவர் தனது பேசிசை மீறி பெற்றோரிடம் பாசமாக நடந்துக்கொண்டால், பெற்றோரின் செலவுக்கு பணம் கொடுத்தால்? கணவரின் பெற்றோர், உடன்பிறப்புக்களை அனுசரித்து அரவனைப்பது தனது கடமை என கணவர் நினைத்தால்?

17) குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளையும் அனுசரித்து நடக்காமல் மனதிற்குள்ளேயே வஞ்சகத்தை வளர்த்து பிறரை துன்புருத்தி இன்பம் காண வேண்டுமென்ற சிந்தனை தோன்றினால்?

18) பெண் தனது கணவர்pடம் படுக்கையறையிலும், வெளியிலும் அன்பாக நடந்துக்கொள்ளாததால் குழந்தை, குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து விலகி செல்லாமல், அன்பை தேடி இன்னொறு திருமணம் செய்துக்கொண்டால்?

19) வீட்டோடு மாப்பிள்ளையாகவும், பெண் தரப்பு வீட்டினரை மட்டுமே உறவு என அடிமையாக்க முயற்சித்து அதை கணவர் ஏற்க மறுத்தால்?
20) குடும்ப பிரச்சனையில் தன்னாதிக்கத்தை மட்டுமே நிலைநாட்ட வேண்டுமென்ற பைத்தியம் பிடித்து விட்டால்?

இந்தக் கட்டுரை எழுதத் தூண்டியதன் நோக்கம்:
தனது பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் அமர்த்த வேண்டும், மற்றவர்கள் மதிக்க வேண்டும், பணத்திற்காக கஷ்டப்பட வைக்காமல் நமது செலவை குறைத்து சேமிக்க வேண்டும், தனது சுயநலத்தை விட குடும்ப நலம் முக்கியம் என எண்ணிலடங்கா தியாகத்தை செய்து வளர்த்த ஒவ்வொரு குடும்பத்தினரும் பொக்கிஷமாக கருதும் அவர்களின் பெற்றோரையும், சார்ந்தவர்களையும் ஒரு கேவலமான சிந்தனை உடைய (இளம்) பெண் கொடுக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்தால் (இளம் பெண் என்ற மாயத்தில் மயங்கி) கைது செய்து சிறையிடதைத்து குடும்ப மானம் கௌரவத்தை சிதைக்கும் செயலை செய்யும் காவல்துறை, அநீதிக்கு துணை போகும் வக்கீல், வேலைபலு காரணமாக சிந்திக்காமல் அவசரத்தில் தீர்ப்பு சொல்லும் நீதிபதி இவர்களின் தவறால் அப்பாவி எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் அறிய வேண்டும் என்பதே.

இந்தக் கட்டுரையை படிப்பவர்களுக்கு வேண்டுகோள்:
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதற்கேற்ப:
உங்கள் பகுத்தறிவை கொண்டு இரண்டு நாட்கள் மகளிர் காவல் நிலையத்திலும், கோர்ட் வாசலிலும் நிகழ்வுகளை கண்காணித்து அவலங்களை உணர்ந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் ஊரில் வரதட்சனை கொடுமை வழக்கு சம்மந்தமாக பத்திரிக்கையில் செய்தி வந்தால் இரு தரப்பினரிடமும் விசாரித்து உண்மையை உணர்ந்துக் கொள்ளவும்.
கோர்ட், காவல்நிலையத்தினரின் பாரபட்சமான போக்கை, தவறு இருவரும் செய்திருந்தாலும் வழக்கு பதிவு செய்வது, சிறையிலடைப்பது, தீர்ப்பு சொல்வதில் நீதி தவறி ஒருதலைபட்சமாக நடந்துக்கொள்வதை பத்திரிக்கை செய்திகளை கவனித்து படித்து வந்தால் புரியும்.

அநீதி ஒவ்வொரு நாட்டிலும் யாரும் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்திய குடிமகனாகிய நாம் நமது நாட்டில் அவலங்களை ஆதங்கத்துடன் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


மகளிர் காவல்நிலையம்:
அரசுத்துறையில் (காவல்துறையில்) உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் மேல் வருமானத்திற்கு வழியிருப்பது போல் மகளிர் காவல்நிலையத்திற்கு மேல் வருமானம் என்பது குடும்பங்களுக்கிடையில் புகுந்து கட்டபஞ்சாயத்து பண்ணியும், அப்பாவி கௌரவமான குடும்பங்களை தொல்லை கொடுத்து மிரட்டி லஞ்சம் கொடுக்கும் வஞ்சக குணம் கொண்ட பிராடுகளை சந்தோஷப்படுத்தி விசுவாசம் காட்டி பணம் பார்ப்பதேயாகும்.

எந்தெந்த காரணத்திற்காக இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் (கமிஷன் பெறுகிறார்கள்):
• இயற்கையாகவே மனைவி இறந்தாலும், மனைவி தரப்பை சேர்ந்தவர்கள், கணவர் தரப்பை மிரட்டி சொத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கவும், மிரட்டி பெரியத் தொகையை பறிக்கவும்.

• கணவரின் பெற்றோரையும் உடன்பிறப்புக்களையும் மிரட்டி துரத்திவிட்டு தனித்குடித்தனம் வைக்க, சொத்தை பறித்துக்கொள்ள

• தன் இஷ்டப்படி நடத்தை சரியில்லாமல் வாழ நினைக்கும் பெண்ணிற்கு கணவர் குறுக்கீடு செய்யாமலும், பெரும் பணம் பறித்து தரவும்

• பெண்ணின் குடும்பத்தினர், கணவரையும் சார்ந்த குடும்பத்தினரையும் மிரட்டி ஆதிக்கம் செலுத்த

• தான் ஏமாற்றியதை, தொடர்ந்து செய்யும் தவறை கணவர் குறுக்கீடு செய்யாமல் இருக்கு

• தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக பொய் கேசு போடுவோம் என மிரட்டி பணம் பறித்து கொடுத்தல்.

• ஒரு பெண் கணவனை உதறி தள்ளி விட்டு கள்ளகாதலனோடு தான் வாழ்வேன் என்று (கணவரே புகார்) சொன்னால், கணவரை துரத்திவிட்டு அந்தப் பெண் ஆசைப்படி கள்ளக்காதலனோடு தான் சேர்த்து வைப்பது, அதே நேரத்தில் கணவர் கள்ளக்காதலியுடன் வாழ்கிறார் என பெண் புகார் செய்தால் கணவரை(யும் குடும்பத்தாரையும்) கைது செய்து சிறையிலடைப்பது.

• காதலி விருப்பமில்லாத காதலனுடன் சேர்த்து வைக்கச்சொல்லினால் காதலன் குடும்பத்தை பல்வேறு சிக்கலான வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுப்போம் என மிரட்டி பணிய வைப்பது. பணியாவிடில் வழக்கு பதிவு செய்து அனைவரையும் சிறையிலடைப்பது. அதே நேரத்தில் காதலன் விருப்பமில்லாத காதலியுடன் சேர்த்து வைக்கச்சொல்லினால் மிரட்டி இனி இந்தப் பெண் விஷயத்தில் குறுக்கிடமாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்புவது, பணியாவிடில் வழக்கு பதிவு செய்து குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையிலடைப்பது.

மகளிர் காவல்நிலையத்தில் பண்புரிபவர்கள் யாரும் சட்ட அறிவு பெற்றவர்களும் கிடையாது. உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் சொல்லும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ளவர்களும் கிடையாது. அராஜகமும், அடக்குமுறையையும் மட்டுமே கொள்கையாக பயிற்றுவிக்கப்பட்டவாகளாக நடந்துக்கொள்ள மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அரசு அங்கீகாரம் வழங்கிய பெண் ரௌடியாக (மகளிர் காவல்நிலையம்) வளம் வருவதால் இவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆசியும், நீதித்துறையின் 'பாவம் பொண்ணு' என்ற ஒருதலைபட்சமான ஆதரவும் நீதியின்றி தொடர்ந்து கிடைத்து வருவதால் அடுத்த குடும்ப வாழ்க்கையை சிதைப்பது பற்றி கவலைபபடுவதும் கிடையாது. அடுத்தவர்கள் வாழ்ந்தாலென்ன செத்தாலென்ன என் வயிறு ரொம்புவது தான் முக்கியம் என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

அரசுத்துறைக்கே உள்ள எழுதப்படாத நடைமுறையில் உள்ள சட்டமான லஞ்சம் கொடுக்கும் வரை அலைகழித்தல், தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்துதல், மிரட்டுதல், மற்றவர்கள் முன் கேவலப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்ற செயல்களை நிறைவேற்றுவதில் நேர்மையாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்.

பொதுவாக அரசுத்துறையில் லஞ்சம் வாங்குகின்ற அனைவரின் ஒருமித்த கருத்து: அரசாங்க சம்பளத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் (மாதம் பிறந்தால் சம்பளப்பணமாக அரசாங்கம், இவர்கள் வாயில் மண்ணை மட்டுமே அள்ளி போடுவது போல) உயிர்வாழவே முடியாது. கடமையை செய்ய அல்லது மீற, மற்றவர்கள் கொடுக்கும் அல்லது துன்புருத்தி பெறும், லஞ்ச பணத்தை வைத்து தான் வாழ்க்கை ஓடுகிறது அல்லது எங்களுக்காக வாங்கவில்லை மேலிட வற்புருத்தல் என்ற சப்பைகட்டு. லஞ்சம் கொடுத்து தான் வேலையில் சேர்ந்துள்ளோம், உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கப்பம் கட்டிக்கொண்டிருந்தால் தான் பதவியில் நிலைக்க முடியும். அதிகம் வசூலித்து கொடுத்தால் தான் எங்களுக்கும், எங்களின் உயர்அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு கிடைக்கும், இதில் முதலமைச்சர் வரை பங்கு போய்க் கொண்டு இருக்கிறது என சப்பைகட்டு கட்டுவது வேறு.

99 சதவிதம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது, (பொய்யான புகார் என்று தெரிந்தும் லஞ்சம் கொடுத்த பெண் தரப்பை திருப்திபடுத்த) பணியாவிடில் வழக்கு பதிவு செய்து பத்திரிக்கையில் செய்தி வர செய்து அவமானப்படுத்தி, முடிந்தவரை ஜாமீனை தடுத்து சிறையிலடைத்து, பிறகு விசாரனை செய்கிறோம் என்ற பெயரில் (சார்ஜ் ஷீட் தயார் செய்கின்றோமென்று)குடும்பதிதிலுள்ள அனைவரையும் அலைகழித்து, மரியாதைக்குறைவாக நடத்தி அவமானப்படுத்தி பாதிக்கப்பட்டவரும் லஞ்சம் கொடுக்கும் வரை இன்னல் தொடரும். தற்காப்புக்காக இவர்களை எதிர்த்தால் தொல்லைகள் தான் அதிகம். 1000 ரூபாய் கொடுத்தால் போலீஸ் ஜீப்பும், போலீஸ் ஸ்டேஷனையும் குத்தகைக்கு எடுத்து தனக்கு பணியாத மாப்பிள்ளை, மாப்பிள்ளை உறவினரை ஸ்டேஷனுக்கு தூக்கிக்கொண்டு வரவைத்து அத்துமீறி நடந்துக்கொள்ளலாம் என்பது ஊரரிந்த செய்தி. காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு உண்மை தெரிந்தும் தூங்குகின்ற மாதிரி நடிப்பவர்களே மிகுதியாக உள்ளார்கள்.

மகளிர் காவல்நிலையத்தில் உள்ளவர்கள் சொல்வது, தவறு பெண் (பெண் என்றால் திருமணமாகாத பெண் அல்லது இளம் மனைவி) பக்கமிருந்தாலும் நாங்கள் பெண்ணிற்கு சாதகமாகவும், ஆண் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு (பெண்கள் உட்பட) எதிராகசும் செயல்பட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டம் என்பது மகளிர் காவல்நிலையத்தினரின் சப்பைகட்டு.

பத்திரிக்கை துறை:
பணத்திற்கும், புகழுக்கும், பிரதி அதிகமாக விற்பனையாக வேண்டுமென்ற வெறியினாலும், உண்மை நிரவரத்தை நடுநிலையோடு ஆராய்ந்து வெளியிடாமல், அரைவேக்காட்டு தனமான நிருபர்களிடமிருந்து பெறப்பட்ட அரைவேக்காட்டு தனமாக செய்திகளையும், உண்னையை சுய புத்தியைக் கொண்டு ஆராயும் திராணியின்றி முழுமையாக விசாரனை செய்யப்படாத காவல்துறை தரப்பு செய்தியை (முதல் தகவல் அறிக்கை) சிந்தித்து செயல்படாமல் பரபரப்புக்காக வெளியிட்டு மஞ்சல் பத்திரிக்கை ரேஞ்சிலேயே தரம் தாழ்ந்து போய் அப்பாவி குடும்பத்தினரை அவமானப்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. மனசாட்சிக்கு பயந்து பிறகு உண்மை தெரிந்தாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. காவல்துறை தரப்பின் முதல் தகவல் அறிக்கைக்கு பிறகு காவல்துறை விசாரணையிலும், நீதித்துயை விசாரனையிலும் நடந்த உண்மையை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

வரதட்சனை கொடுமை வழக்கு என்று செய்தி வந்த சம்பவத்தின் இரண்டு தரப்பையும் விசாரித்தால் 99 சதவித வழக்குகள் பொய்யாகவே தொடுக்கப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பத்திரிக்கை துறை நடுநிலையானவர்கள் என்ற நிலை தேய்ந்து எப்படியும் பணம், புகழ் சம்பாதிக்கணும் என்ற வெறியுடன் அலையும் மோசமான நிலைக்கு சென்றுக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. மீடியாத்துறை என்பது நம்பிக்கையூட்டக்கூடிய, நம்பகத்தன்னையுள்ள துறை என்ற நிலை மாறி சமுதாய வழிகேட்டிற்கு இவர்களை மிஞ்ச ஆளில்லை என்ற நிலைக்கு முன்னோடியாக சென்றுக்கொண்டிருக்கின்றது.

பொய் வரதட்சனை கொடுமை வழக்கை உண்மை போல பத்திரிக்கையில் வெளியிட்டு கௌரவமான அப்பாவி குடும்ப மானத்தை ஊர், உலகம் முழுக்க நாறடித்து எத்தனை லட்சம் குடும்பங்களை அவமானப்படுத்தி உயிரோடு சாகடித்துள்ளார்கள் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், சார்ந்த உறவினர்களுக்கும் மட்டுமே நெஞ்சக்குமுறல் தெரியும். தவறு செய்கின்ற அரைவேக்காட்டு மஞ்சல் (தினசரி) பத்திரிக்கைத் துறையினருக்கு தெரியாது.
சொந்த உழைப்பில் நேர்மையாக, ஒழுக்கமாக வாழ வேண்டுமென்ற கொள்கையுடம் இருக்கும் பெரும்பான்னையான மக்கள், கௌரவத்தை தான் சொத்தாக கருதுவார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் கட்டிக்காத்த கௌரவத்தை, இந்த பத்திரிக்கைதுறை உண்மை நிலவரத்தை ஆராய்ந்து செய்தி வெளியிடாமல், பத்திரிக்கை பக்கங்களை நிரப்பி பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் அரைவேக்காட்டு செய்தியை வெளியிட்டு மொத்த குடும்ப கௌரவத்தையும் குலைக்கின்ற மட்டமான செயலில் ஈடுபடுவது வேதனையான விசயம்.

இந்த பத்திரிக்கை செய்தியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சொல்ல விரும்புவது:
இன்றைய செய்தி, நாளைய குப்பை. என்று குப்பையை நினைத்து கவலைப்படுவதை தவிர்க்கவும்.
மனசாட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு எப்படியும் பணம் சம்பாதிக்கனும் என்ற வேசித்தனத்திற்கு புகுந்து விட்டவர்ளை திருத்த முடியாது. பணமும், கௌரவத்தை விட்டு கொடுத்து எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கொண்ட நாட்டில், உண்மை நிலையை உணர்ந்து, பாதிக்கப்பட்ட நாம் தான் நொந்து போய் ஒதுங்கி வாழ்ந்தால், மீதமுள்ள வாழ்நாளில் ஓரளவு தொல்லையில்லாமல் மிச்ச கௌரவத்தோடு இருக்கலாம்.



விரைவில் கீழ்கண்ட தலைப்பில்:
• வக்கீல்கள் எனும் பணத்திற்காக கேவலமான சிந்தனை, செயல்பாட்டை கொண்டவர்கள்
• கோர்ட் மற்றும் நீதிபதிகள் என்ற அப்பாவிகளை அலையவிட்டு மனஉலைச்சலை உண்டாக்கி உயிரோடு சாகடிப்பவர்கள்.
• வழக்கிற்கு பிறகு இரு தரப்பினரின் மன நிலை
• அரசாங்கத்திற்கு வேண்டுகோள்

Saturday, December 12, 2009

வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை

கடந்த சில வருடங்களாக வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகமாக பதிவாகுவதை பத்திரிக்கை, தொலைக்காட்சி வழியாக கண்டு இப்படியும் கணவர் குடும்பத்தினர்கள் இருக்கின்றார்களே என்று ஆதங்கப்பட்டதுண்டு முழுமையாக இருதரப்பினரிடமும் ஆராய்ந்து நடந்த உண்மை சம்பவத்தை விசாரிக்காத வரை.

தலைசிறந்த இந்திய குடும்ப அமைப்பை சிதைக்கும் திட்டமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொய் வரதட்சணை கொடுமை வழக்கின் மூலம் குடும்ப அமைப்பு சிதைந்து வருவதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கம், யாரையும் புண்படுத்த வேண்டுமென்பதல்ல.

சட்டங்கள் இயற்றப்படுவதன் உண்மையான நோக்கம் அனைவருக்கும் சமநீதி, அநீதியை எதிர்த்து நீதி வாழ வேண்டுமென்ற உன்னத குறிக்கோள். இந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உறுவாக்கப்பட்டதே காவல் துறையும், நீதித்துறையும். இன்று மிகுதியாக சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும், தவறாக பயன்படுத்த வழிகாட்டியாக இருப்பதும் நீதித்துறை (வழக்கறிஞர்களும்), காவல்துறையை சேர்ந்தவர்களும் என்பதே நிதர்சன உண்மை.

மக்கள் நலனுக்காக சட்டத்தை இயற்ற தெரிந்த வல்லுனர்கள், அதை எப்படி தவறாக பயன்படுத்த நினைப்பவர்களிடமிருந்து பாதுகாப்பதென்பதில் கவனிக்க தவறுவதால் அப்பாவிகள் அல்லல்படுகிறார்கள், பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமென்ற சிந்தனையுடையவர்கள் இன்பமடைகிறார்கள். வேண்டுமென்றே சட்டத்தை பலகீனமாக இயற்றி, சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த அமைக்கப்பட்ட துறையை சார்ந்தவர்கள் வருவாய் ஈட்டிக்கொள்ள அரசே வழி செய்து கொடுத்துள்ளதா என்பது கடவுளுக்கே வெளிச்சம்?

அபரிதமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மையமாக கொண்டு இயங்கும் நவீன காலாச்சாரத்திற்குள் தன்னையும் முதன்மை படுத்திக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு, தவறு என்பதற்கு அளவுக் கோலின்றி
எப்படியும் வாழலாம் என்ற மனம் போன சிந்தையே சீர்கேட்டிற்கு அழைத்துச் செல்கிறது. இதற்கு உறுதுணையாக (1) பெற்றோர்கள் - தனது பிள்ளைகளுக்கு ஒழுக்கம், பண்பாடு, நீதி, கலாச்சாரத்தை போதித்து வழிகாட்டியாக இருக்காமல் பொருளீட்டல் மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுவது. (2) மீடியா – கெட்ட செயல்களை மட்டும் மெருகேற்றி தீய சிந்தனைகளை விதைப்பது. (3) அரசுத்துறையை சார்ந்தவர்கள் பணம் (லஞ்சம்) கொடுத்தால், வாடிக்கையாளரை திருப்தி படுத்துவது மட்டுமே எனது திருப்பணி என கூலிப்படையினரை மிஞ்சி (சட்டத்தை தவறாக பயன்படுத்தி) விசுவாசம் காட்டுவது.

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை (யும் மகளிர் காவல்நிலையத்தையும்) அரசு இயற்றியதன் உன்னத நோக்கம், பெண்ணின் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டுமென்ற உயரிய நோக்கம். ஆனால் தற்பொழுது நடைமுறையில் 99 சதவிதம் சட்டத்தை தவறாக பயன்படுத்தி (மகளிர் காவல்நிலையத்திற்கு லஞ்சம் கொடுத்தும், அநீதிக்கு துணைபோக வக்கீலுக்கு பணம் கொடுத்தும்) பணம் பறித்தும், மிரட்டி அடிபணிய வைத்தும் நவீன விபச்சாரமாக கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு உறுதுணையாக காவல்துறை, நீதித்துயையை சார்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த பிராடுகளுக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்து நடிப்பு பயிற்சி கொடுத்து (காவல்துறை, நீதித்துறையை கேவலப்படுத்தி கோமாளியாக்கி) ஏமாற்றக் கற்றுக்கொடுப்பவர்கள் என்பது தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய விஷயம்.

பொதுவாகவே தன் தவறை மறைக்க மற்றவர்கள் மேல் அபாண்டமாக பழியை போட்டு அவதூரை பரப்பினால் தனது குறையை யாரும் ஆராய மாட்டார்கள், உண்மையை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற மனோதத்துவத்திற்கேற்ப,

எந்தெந்த மாதிரி பெண்கள் இந்த பொய் கேசுகளை கொடுக்கிறார்கள் என்பதற்கு உதாரணங்கள் சில:

திருமணத்திற்கு முன்:
1) பெண்ணை பற்றி சரிவர விசாரிக்காமல் நிச்சயித்து, திருமணத்திற்கு முன் பெண்ணின் அல்லது பெண் குடும்பத்தினரின் யோக்கியதை தெரிந்து விலக முற்பட்டால்?

2) இன்டர்னெட் (சாட்டிங்) வழியாக உலக அழகி போல் பொய்யான பில்டப் கொடுத்து காதலிப்பது போல் ஏமாற்றி, மயக்கி பணம் கேட்டு மிரட்டி பணியாவிட்டால்?

3) மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் தன்னை ஒழுக்கமான குடும்பப்பெண் போல் செய்திகளை பரப்பி, நம்ப வைத்து, ஏமாற்றி, உண்மையறிந்து உஷாரானால்?

4) வசதியான இளைஞர்களை மயக்கி, திருமணம் செய்து, சொத்தை அனுபவிக்கலாம் என முயற்சித்து நிறைவேறாவிட்டால்?

திருமணமான சில அல்லது பல வருடங்களுக்குள்:
1) திருமணத்திற்கு முன் இருந்த கள்ள தொடர்பை (கணவர் வீட்டாருக்கு) மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால், பத்தினி வேஷம் போட்டு தப்பிக்க?

2) தொடரும் கள்ளக்காதல் வெளியில் தெரிந்தால், பத்தினி வேஷம் போட்டு தப்பிக்க?

3) காவல்துறை, நீதித்துறையை புரோக்கராக உபயோகித்து கணவர் குடும்பத்தாரின் மேல் அபாண்டமாக பழிசுமத்தி பணம் பறித்து தன் இஷ்டப்படி கேட்பாறின்றி மனம் விரும்பிய போக்கில் வாழ விரும்பினால்?

4) பெண்ணுக்கு இருக்கின்ற நீண்ட கால, தீர்க்க முடியாத வியாதியை மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால்?

5) தாம்பத்யத் தகுதியின்மை, குழந்தை பெற தகுதியின்மையை மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால்?

6) எப்படியும் வாழலாம் என்று பழகிய பெண்ணை குடும்பமாக கௌரவமாக வாழ நிர்பந்தித்தால்?

7) பணத்திற்கு (கொள்ளையடிக்க) ஆசைபட்டு வசதியான இடத்தில் திருமணம் செய்து திட்டம் நிறைவேறாவிடில், கிடைத்தவரை லாபம் என சுருட்டிக்கொண்டு சட்டரீதியாக செல்ல நினைத்தால்?

8) வசதியாக வாழ கனவு கண்டு வசதியான காதலரை நடித்து திருமணம் செய்து , கணவர் குடும்பத்தாரின் புறக்கணிப்பால், ஏமாற்றமடைந்து கணவரின் இயன்ற வருமானத்தில் நிஜ வாழ்க்கை வாழ நிர்பந்திப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனம் வெதும்பினால்?

9) திருமணத்தின் பொழுது மற்றவர்கள் எதிரில் பகட்டுக்காக பெண்ணுக்கு அதை செய்கிறேன், இதை செய்தேன் என்று வாய் சவடால் விட்டு நம்ப வைத்து நிஜத்தில் போலியான நகையை போட்டு, குறைத்து செய்துவிட்டு நிஜத்தை செய்ய அல்லது (குட்டை) மற்றவர்களுக்கு சொல்ல வலியுறுத்தினால்?

10) பிறந்த வீட்டில் மற்றவர்களை (வேலைக்காரர்கள் போல) வேலை செய்ய வைத்தே சுயநலமாக (செல்லமாக) வாழ்ந்து, புகுந்த வீட்டில் பொறுப்புகளை சுமக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் போது, யதார்த்தத்தை உணராமல் மன அழுத்தத்திற்குள்ளாகினால்?

11) கணவன் என்பவன் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரம், தனது சுதந்திரத்தில் தலையிட உரிமையில்லை என சினிமா, நாடகத்தில் வரும் ஹீரோயின், வில்லி கற்பனை கதாபாத்திரத்தை போன்று (தன்னிலையை உணராமல்) வாழ எத்தனித்து, கணவர் குறுக்கீடு செய்தால்?

12) புகுந்த வீட்டில் புதுப்பெண் என்ற இரக்கத்தில் விட்டுகொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டு கொடுக்கும் உரிமையை தவறாக ஏமாளிகள் என நினைத்து கீழ்தரமாக அல்லது ஆதிக்கம் நடத்த எத்தனித்து முயற்சி வெற்றி பெறாவிட்டால்?

13) கணவரின் பெற்றோரை கேவலமாக கொடுமைபடுத்துவதை கணவர் எதிர்த்து கேட்டால்.

14) கணவரின் பெற்றோர்கள், திருமணத்திற்கு பிறகு, கணவர் பெயருக்கோ, தன் பெயருக்கோ சொத்துக்களை மாற்றி கொடுக்காவிட்டால்?

15) கணவரின் பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்த முடியாவிட்டால், கணவர் சொத்துக்களோடு வந்து தனிக்குடித்தனம் நடத்த மறுத்தால்?

16) கணவர் தனது பேசிசை மீறி பெற்றோரிடம் பாசமாக நடந்துக்கொண்டால், பெற்றோரின் செலவுக்கு பணம் கொடுத்தால்? கணவரின் பெற்றோர், உடன்பிறப்புக்களை அனுசரித்து அரவனைப்பது தனது கடமை என கணவர் நினைத்தால்?

17) குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளையும் அனுசரித்து நடக்காமல் மனதிற்குள்ளேயே வஞ்சகத்தை வளர்த்து பிறரை துன்புருத்தி இன்பம் காண வேண்டுமென்ற சிந்தனை தோன்றினால்?

18) பெண் தனது கணவர்pடம் படுக்கையறையிலும், வெளியிலும் அன்பாக நடந்துக்கொள்ளாததால் குழந்தை, குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து விலகி செல்லாமல், அன்பை தேடி இன்னொறு திருமணம் செய்துக்கொண்டால்?

19) வீட்டோடு மாப்பிள்ளையாகவும், பெண் தரப்பு வீட்டினரை மட்டுமே உறவு என அடிமையாக்க முயற்சித்து அதை கணவர் ஏற்க மறுத்தால்?
20) குடும்ப பிரச்சனையில் தன்னாதிக்கத்தை மட்டுமே நிலைநாட்ட வேண்டுமென்ற பைத்தியம் பிடித்து விட்டால்?

இந்தக் கட்டுரை எழுதத் தூண்டியதன் நோக்கம்:
தனது பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் அமர்த்த வேண்டும், மற்றவர்கள் மதிக்க வேண்டும், பணத்திற்காக கஷ்டப்பட வைக்காமல் நமது செலவை குறைத்து சேமிக்க வேண்டும், தனது சுயநலத்தை விட குடும்ப நலம் முக்கியம் என எண்ணிலடங்கா தியாகத்தை செய்து வளர்த்த ஒவ்வொரு குடும்பத்தினரும் பொக்கிஷமாக கருதும் அவர்களின் பெற்றோரையும், சார்ந்தவர்களையும் ஒரு கேவலமான சிந்தனை உடைய (இளம்) பெண் கொடுக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்தால் (இளம் பெண் என்ற மாயத்தில் மயங்கி) கைது செய்து சிறையிடதைத்து குடும்ப மானம் கௌரவத்தை சிதைக்கும் செயலை செய்யும் காவல்துறை, அநீதிக்கு துணை போகும் வக்கீல், வேலைபலு காரணமாக சிந்திக்காமல் அவசரத்தில் தீர்ப்பு சொல்லும் நீதிபதி இவர்களின் தவறால் அப்பாவி எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் அறிய வேண்டும் என்பதே.

இந்தக் கட்டுரையை படிப்பவர்களுக்கு வேண்டுகோள்:
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதற்கேற்ப:
உங்கள் பகுத்தறிவை கொண்டு இரண்டு நாட்கள் மகளிர் காவல் நிலையத்திலும், கோர்ட் வாசலிலும் நிகழ்வுகளை கண்காணித்து அவலங்களை உணர்ந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் ஊரில் வரதட்சனை கொடுமை வழக்கு சம்மந்தமாக பத்திரிக்கையில் செய்தி வந்தால் இரு தரப்பினரிடமும் விசாரித்து உண்மையை உணர்ந்துக் கொள்ளவும்.
கோர்ட், காவல்நிலையத்தினரின் பாரபட்சமான போக்கை, தவறு இருவரும் செய்திருந்தாலும் வழக்கு பதிவு செய்வது, சிறையிலடைப்பது, தீர்ப்பு சொல்வதில் நீதி தவறி ஒருதலைபட்சமாக நடந்துக்கொள்வதை பத்திரிக்கை செய்திகளை கவனித்து படித்து வந்தால் புரியும்.

அநீதி ஒவ்வொரு நாட்டிலும் யாரும் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்திய குடிமகனாகிய நாம் நமது நாட்டில் அவலங்களை ஆதங்கத்துடன் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


மகளிர் காவல்நிலையம்:
அரசுத்துறையில் (காவல்துறையில்) உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் மேல் வருமானத்திற்கு வழியிருப்பது போல் மகளிர் காவல்நிலையத்திற்கு மேல் வருமானம் என்பது குடும்பங்களுக்கிடையில் புகுந்து கட்டபஞ்சாயத்து பண்ணியும், அப்பாவி கௌரவமான குடும்பங்களை தொல்லை கொடுத்து மிரட்டி லஞ்சம் கொடுக்கும் வஞ்சக குணம் கொண்ட பிராடுகளை சந்தோஷப்படுத்தி விசுவாசம் காட்டி பணம் பார்ப்பதேயாகும்.

எந்தெந்த காரணத்திற்காக இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் (கமிஷன் பெறுகிறார்கள்):
• இயற்கையாகவே மனைவி இறந்தாலும், மனைவி தரப்பை சேர்ந்தவர்கள், கணவர் தரப்பை மிரட்டி சொத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கவும், மிரட்டி பெரியத் தொகையை பறிக்கவும்.

• கணவரின் பெற்றோரையும் உடன்பிறப்புக்களையும் மிரட்டி துரத்திவிட்டு தனித்குடித்தனம் வைக்க, சொத்தை பறித்துக்கொள்ள

• தன் இஷ்டப்படி நடத்தை சரியில்லாமல் வாழ நினைக்கும் பெண்ணிற்கு கணவர் குறுக்கீடு செய்யாமலும், பெரும் பணம் பறித்து தரவும்

• பெண்ணின் குடும்பத்தினர், கணவரையும் சார்ந்த குடும்பத்தினரையும் மிரட்டி ஆதிக்கம் செலுத்த

• தான் ஏமாற்றியதை, தொடர்ந்து செய்யும் தவறை கணவர் குறுக்கீடு செய்யாமல் இருக்கு

• தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக பொய் கேசு போடுவோம் என மிரட்டி பணம் பறித்து கொடுத்தல்.

• ஒரு பெண் கணவனை உதறி தள்ளி விட்டு கள்ளகாதலனோடு தான் வாழ்வேன் என்று (கணவரே புகார்) சொன்னால், கணவரை துரத்திவிட்டு அந்தப் பெண் ஆசைப்படி கள்ளக்காதலனோடு தான் சேர்த்து வைப்பது, அதே நேரத்தில் கணவர் கள்ளக்காதலியுடன் வாழ்கிறார் என பெண் புகார் செய்தால் கணவரை(யும் குடும்பத்தாரையும்) கைது செய்து சிறையிலடைப்பது.

• காதலி விருப்பமில்லாத காதலனுடன் சேர்த்து வைக்கச்சொல்லினால் காதலன் குடும்பத்தை பல்வேறு சிக்கலான வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுப்போம் என மிரட்டி பணிய வைப்பது. பணியாவிடில் வழக்கு பதிவு செய்து அனைவரையும் சிறையிலடைப்பது. அதே நேரத்தில் காதலன் விருப்பமில்லாத காதலியுடன் சேர்த்து வைக்கச்சொல்லினால் மிரட்டி இனி இந்தப் பெண் விஷயத்தில் குறுக்கிடமாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்புவது, பணியாவிடில் வழக்கு பதிவு செய்து குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையிலடைப்பது.

மகளிர் காவல்நிலையத்தில் பண்புரிபவர்கள் யாரும் சட்ட அறிவு பெற்றவர்களும் கிடையாது. உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் சொல்லும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ளவர்களும் கிடையாது. அராஜகமும், அடக்குமுறையையும் மட்டுமே கொள்கையாக பயிற்றுவிக்கப்பட்டவாகளாக நடந்துக்கொள்ள மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அரசு அங்கீகாரம் வழங்கிய பெண் ரௌடியாக (மகளிர் காவல்நிலையம்) வளம் வருவதால் இவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆசியும், நீதித்துறையின் 'பாவம் பொண்ணு' என்ற ஒருதலைபட்சமான ஆதரவும் நீதியின்றி தொடர்ந்து கிடைத்து வருவதால் அடுத்த குடும்ப வாழ்க்கையை சிதைப்பது பற்றி கவலைபபடுவதும் கிடையாது. அடுத்தவர்கள் வாழ்ந்தாலென்ன செத்தாலென்ன என் வயிறு ரொம்புவது தான் முக்கியம் என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

அரசுத்துறைக்கே உள்ள எழுதப்படாத நடைமுறையில் உள்ள சட்டமான லஞ்சம் கொடுக்கும் வரை அலைகழித்தல், தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்துதல், மிரட்டுதல், மற்றவர்கள் முன் கேவலப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்ற செயல்களை நிறைவேற்றுவதில் நேர்மையாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்.

பொதுவாக அரசுத்துறையில் லஞ்சம் வாங்குகின்ற அனைவரின் ஒருமித்த கருத்து: அரசாங்க சம்பளத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் (மாதம் பிறந்தால் சம்பளப்பணமாக அரசாங்கம், இவர்கள் வாயில் மண்ணை மட்டுமே அள்ளி போடுவது போல) உயிர்வாழவே முடியாது. கடமையை செய்ய அல்லது மீற, மற்றவர்கள் கொடுக்கும் அல்லது துன்புருத்தி பெறும், லஞ்ச பணத்தை வைத்து தான் வாழ்க்கை ஓடுகிறது அல்லது எங்களுக்காக வாங்கவில்லை மேலிட வற்புருத்தல் என்ற சப்பைகட்டு. லஞ்சம் கொடுத்து தான் வேலையில் சேர்ந்துள்ளோம், உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கப்பம் கட்டிக்கொண்டிருந்தால் தான் பதவியில் நிலைக்க முடியும். அதிகம் வசூலித்து கொடுத்தால் தான் எங்களுக்கும், எங்களின் உயர்அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு கிடைக்கும், இதில் முதலமைச்சர் வரை பங்கு போய்க் கொண்டு இருக்கிறது என சப்பைகட்டு கட்டுவது வேறு.

99 சதவிதம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது, (பொய்யான புகார் என்று தெரிந்தும் லஞ்சம் கொடுத்த பெண் தரப்பை திருப்திபடுத்த) பணியாவிடில் வழக்கு பதிவு செய்து பத்திரிக்கையில் செய்தி வர செய்து அவமானப்படுத்தி, முடிந்தவரை ஜாமீனை தடுத்து சிறையிலடைத்து, பிறகு விசாரனை செய்கிறோம் என்ற பெயரில் (சார்ஜ் ஷீட் தயார் செய்கின்றோமென்று)குடும்பதிதிலுள்ள அனைவரையும் அலைகழித்து, மரியாதைக்குறைவாக நடத்தி அவமானப்படுத்தி பாதிக்கப்பட்டவரும் லஞ்சம் கொடுக்கும் வரை இன்னல் தொடரும். தற்காப்புக்காக இவர்களை எதிர்த்தால் தொல்லைகள் தான் அதிகம். 1000 ரூபாய் கொடுத்தால் போலீஸ் ஜீப்பும், போலீஸ் ஸ்டேஷனையும் குத்தகைக்கு எடுத்து தனக்கு பணியாத மாப்பிள்ளை, மாப்பிள்ளை உறவினரை ஸ்டேஷனுக்கு தூக்கிக்கொண்டு வரவைத்து அத்துமீறி நடந்துக்கொள்ளலாம் என்பது ஊரரிந்த செய்தி. காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு உண்மை தெரிந்தும் தூங்குகின்ற மாதிரி நடிப்பவர்களே மிகுதியாக உள்ளார்கள்.

மகளிர் காவல்நிலையத்தில் உள்ளவர்கள் சொல்வது, தவறு பெண் (பெண் என்றால் திருமணமாகாத பெண் அல்லது இளம் மனைவி) பக்கமிருந்தாலும் நாங்கள் பெண்ணிற்கு சாதகமாகவும், ஆண் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு (பெண்கள் உட்பட) எதிராகசும் செயல்பட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டம் என்பது மகளிர் காவல்நிலையத்தினரின் சப்பைகட்டு.

பத்திரிக்கை துறை:
பணத்திற்கும், புகழுக்கும், பிரதி அதிகமாக விற்பனையாக வேண்டுமென்ற வெறியினாலும், உண்மை நிரவரத்தை நடுநிலையோடு ஆராய்ந்து வெளியிடாமல், அரைவேக்காட்டு தனமான நிருபர்களிடமிருந்து பெறப்பட்ட அரைவேக்காட்டு தனமாக செய்திகளையும், உண்னையை சுய புத்தியைக் கொண்டு ஆராயும் திராணியின்றி முழுமையாக விசாரனை செய்யப்படாத காவல்துறை தரப்பு செய்தியை (முதல் தகவல் அறிக்கை) சிந்தித்து செயல்படாமல் பரபரப்புக்காக வெளியிட்டு மஞ்சல் பத்திரிக்கை ரேஞ்சிலேயே தரம் தாழ்ந்து போய் அப்பாவி குடும்பத்தினரை அவமானப்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. மனசாட்சிக்கு பயந்து பிறகு உண்மை தெரிந்தாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. காவல்துறை தரப்பின் முதல் தகவல் அறிக்கைக்கு பிறகு காவல்துறை விசாரணையிலும், நீதித்துயை விசாரனையிலும் நடந்த உண்மையை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

வரதட்சனை கொடுமை வழக்கு என்று செய்தி வந்த சம்பவத்தின் இரண்டு தரப்பையும் விசாரித்தால் 99 சதவித வழக்குகள் பொய்யாகவே தொடுக்கப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பத்திரிக்கை துறை நடுநிலையானவர்கள் என்ற நிலை தேய்ந்து எப்படியும் பணம், புகழ் சம்பாதிக்கணும் என்ற வெறியுடன் அலையும் மோசமான நிலைக்கு சென்றுக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. மீடியாத்துறை என்பது நம்பிக்கையூட்டக்கூடிய, நம்பகத்தன்னையுள்ள துறை என்ற நிலை மாறி சமுதாய வழிகேட்டிற்கு இவர்களை மிஞ்ச ஆளில்லை என்ற நிலைக்கு முன்னோடியாக சென்றுக்கொண்டிருக்கின்றது.

பொய் வரதட்சனை கொடுமை வழக்கை உண்மை போல பத்திரிக்கையில் வெளியிட்டு கௌரவமான அப்பாவி குடும்ப மானத்தை ஊர், உலகம் முழுக்க நாறடித்து எத்தனை லட்சம் குடும்பங்களை அவமானப்படுத்தி உயிரோடு சாகடித்துள்ளார்கள் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், சார்ந்த உறவினர்களுக்கும் மட்டுமே நெஞ்சக்குமுறல் தெரியும். தவறு செய்கின்ற அரைவேக்காட்டு மஞ்சல் (தினசரி) பத்திரிக்கைத் துறையினருக்கு தெரியாது.
சொந்த உழைப்பில் நேர்மையாக, ஒழுக்கமாக வாழ வேண்டுமென்ற கொள்கையுடம் இருக்கும் பெரும்பான்னையான மக்கள், கௌரவத்தை தான் சொத்தாக கருதுவார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் கட்டிக்காத்த கௌரவத்தை, இந்த பத்திரிக்கைதுறை உண்மை நிலவரத்தை ஆராய்ந்து செய்தி வெளியிடாமல், பத்திரிக்கை பக்கங்களை நிரப்பி பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் அரைவேக்காட்டு செய்தியை வெளியிட்டு மொத்த குடும்ப கௌரவத்தையும் குலைக்கின்ற மட்டமான செயலில் ஈடுபடுவது வேதனையான விசயம்.

இந்த பத்திரிக்கை செய்தியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சொல்ல விரும்புவது:
இன்றைய செய்தி, நாளைய குப்பை. என்று குப்பையை நினைத்து கவலைப்படுவதை தவிர்க்கவும்.
மனசாட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு எப்படியும் பணம் சம்பாதிக்கனும் என்ற வேசித்தனத்திற்கு புகுந்து விட்டவர்ளை திருத்த முடியாது. பணமும், கௌரவத்தை விட்டு கொடுத்து எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கொண்ட நாட்டில், உண்மை நிலையை உணர்ந்து, பாதிக்கப்பட்ட நாம் தான் நொந்து போய் ஒதுங்கி வாழ்ந்தால், மீதமுள்ள வாழ்நாளில் ஓரளவு தொல்லையில்லாமல் மிச்ச கௌரவத்தோடு இருக்கலாம்.



விரைவில் கீழ்கண்ட தலைப்பில்:
• வக்கீல்கள் எனும் பணத்திற்காக கேவலமான சிந்தனை, செயல்பாட்டை கொண்டவர்கள்
• கோர்ட் மற்றும் நீதிபதிகள் என்ற அப்பாவிகளை அலையவிட்டு மனஉலைச்சலை உண்டாக்கி உயிரோடு சாகடிப்பவர்கள்.
• வழக்கிற்கு பிறகு இரு தரப்பினரின் மன நிலை
• அரசாங்கத்திற்கு வேண்டுகோள்